சிவாச்சாரியார்களின் திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்பு

320 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 11, 2014, 9:27:15 PM8/11/14
to mintamil, vallamai
என் நெஞ்சில் குருதி கொட்டிய நிகழ்ச்சி.

தமிழ் வாழ்த்துப் பாடுகிறார்கள்.
தமிழர், தமிழரல்லாதோர் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்.
வாழ்த்துப் பா நிறைவில் இருக்கையில் அமர்கிறார்கள்.

தமிழ் வாழ்த்துப் பாடுகையில் எழுந்து 
தமிழுக்கு மரியாதை செய்யாதவர் இருந்தார்கள்?
தமிழரல்லாதவரல்லர், தமிழரே.

நாளும் தமிழ் வளர்த்த சுந்தரர் வழிவந்த 
சிவாச்சாரியார்களான தமிழரே.
சிவாச்சாரியார்கள் தமிழைத் திட்டமிட்டுப் புற்கணித்தார்கள்.
என் கண்ணால் கண்டேன்.
நெஞ்சம் புண்ணாகி நீர்மல்கும் கண்ணாகி நின்றேன்.

ஐந்து அல்லது ஆறு சிவாச்சாரியர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களுக்காக அந்த நிகழ்ச்சியில் சிறப்பு இருக்கை.

தமிழ் வாழ்த்து என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறுகிறார்.

எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்.
அமைச்சர், மாநகர முதல்வர், பாதிரியார், இமாம், குருமகாசந்நிதானம், இந்தியத் தூதரகச் சார்பாளர், அரச அதிபர், அரசின் மூத்த அலுவலர், சிங்களவரான படையணியினர், காவல்துறைத் தலைவர் இவ்வாறாக நிகழ்ச்சிக்கு வந்தவர் யாவரும் எழுந்து நிற்கிறார்கள்.

சிவாச்சாரியார்களுள் மூத்தவர் எழுந்து நிற்க முயல்கிறார்.
பின்னால் இருந்த சிவாச்சாரியார் தடுக்கிறார்.
மூத்த சிவாச்சாரியார் உடனே உட்காருகிறார்.

இசைவாணரான பெண்மணி வருகிறார்.
வாழிய செந்தமிழ் எனப் பாரதியின் பாடலை இசைக்கத் தொடங்குகிறார்.

பாடி முடியும் வரை நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் எழுந்து நிற்க
சிவாச்சாரியார்கள் மட்டும் எழுந்திருக்கவே இல்லை.

இதற்கு முன்பாக,
பாதிரியார் தமிழில் வழிபாடு செய்கிறார்.
இமாம் தமிழில் வழிபாடு செய்கிறார்.
நல்லைக் குருமகாசந்நிதானம் தமிழில் வாழ்த்திப் பேசுகிறார்.

சிவாச்சாரியார்கள் வடமொழியில் மந்திரம் சொல்கின்றனர்.
ஒரு சொல் தமிழ் வரவில்லை.
தேவார திருவாசகம் படிக்கவில்லை.

திட்டமிட்டுத் தமிழைப் புறக்கணிக்கும் சில சிவாச்சாரியார்களைத் 
தமிழர் திருக்கோயில்களில் ஆதரிக்கின்றனரே?
தமிழ் மண்ணில் தமிழுக்கு உரிய இடத்தைத் 
திட்டமிட்டு மறுப்போர் தமிழரல்லாதவரல்லர், 

நாளும் தமிழ் வளர்த்த
சுந்தரர் வழிவந்தவர்கள்தாம் இத் தமிழர்?

2500 ஆண்டுகளுக்கு மேலாகத் 
தமிழும் சைவமும் வளர்ந்த யாழ்ப்பாணத்தில் 
என் நெஞ்சில் குருதி கொட்டிய நிகழ்ச்சி.
10.08.2014 அன்று, மாமன்னர் மூவருக்குச் 
சிலை திறந்த விழா நிகழ்ச்சியில் 
சிவாச்சாரியார்களின் திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்பு.


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
mamannar.wmv

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 11, 2014, 11:43:59 PM8/11/14
to vallamai, mintamil
வருத்தம் தரும் செய்தி.

கண்டிக்கத்தக்கது. வாழ்த்துக்கு மரியாதை செய்யாதவர்களிடம் கை சைகை மூலம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். நிகழ்ச்சி முடிவில் காரணம் கேட்டிருக்க வேண்டும். வாழ்த்துக்கு மரியாதை செய்யாததைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்பது என் எண்ணம். தவறென்றால் தட்டிக் கேட்பார்கள் என்பதை அவர்களை உணரவைக்க வேண்டும். 


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Aug 13, 2014, 2:38:19 AM8/13/14
to vallamai

இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் வந்தே மாதரம் பாடல் தான் தேசியகீதம் போல் காங்கிரஸ் கட்சி பொதுகூட்டங்கள் எங்கும் பாடப்பட்டது. அல்லாவை தவிர யாரையும் வணங்கமாட்டோம் என உறுதிபூன்ட முஸ்லிம்கள் "தாயை வணங்குவோம்" என பொருள்படும் வந்தேமாதரம் பாடலை பாட மறுத்ததால் சர்ச்சைகள் எழுந்து, அதன்பின் ஜனகண மண தேசியகீதமாக தேர்ந்தெடுக்கபட்டது.

இன்னமும் வந்தேமாதரம் பாடல் பள்ளிகளில் ஒலித்தால் முஸ்லிம்கள் அதை பாட மறுப்பார்கள். இத்குறித்து சில ஆன்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அரசில் ஒரு விருதுவழங்கும் விழாவில் வந்தேமாதரம் இசைக்கப்ப்ட்டபோதும், பின்னாளில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வாழ்த்து பாடபட்டபோதும் முஸ்லிம், திராவிட முன்னேற்ற கழக அமைச்சர்கள் எழுந்து நிற்காததால் சர்ச்சை வந்தது என நினைவு.

அமெரிக்கபள்ளிகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து தடைசெய்யபட்ட விஷயம். தேசியகீதம் பாடபடுகையில் எழுந்து நிற்கும் அவசியம் இல்லை. அவை மரபு கருதி அனைவரும் நின்றாலும் சிலர் கொள்கை காரணமாக எழுந்து நிற்க மறுப்பதுண்டு. அது அங்கே பேச்சு சுதந்திரமாக தான் கருதபடுகிறது. அமெரிக்க கொடியை எரிக்க அமெரிக்காவில் எத்தடையும் இல்லை.

சிவனை அன்றி யாரையும் வணங்கமாட்டேன் எனும் மரபு அவர்களுக்கு இருந்தால் அதை மதிப்பதே நம் தருமம். அதை அவமரியாதையாக கருதவேண்டியது இல்லை. ஒருவருக்கு பிடிக்காததை வணங்க, மரியாதை கொடுக்க சொல்வது பொருத்தமற்றது.




--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 13, 2014, 7:12:29 PM8/13/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com

உலகம் முழுவதுமாக இன்று 6,000 தொடக்கம் 7,000 சிவாச்சாரியார் குடும்பங்கள் உள. இவர்களுள் 1,000 குடும்பங்கள் இலங்கையில் உள. மலேசியா சிங்கப்பூரில் 150 குடும்பங்கள் வரை உள. அண்மையில் உலகெங்கும் பரவி வாழ்பவராக 150 குடும்பங்கள் உள. ஆக மொத்தம் பிறப்பு வழியாகச் சிவாச்சாரியார் குலத்தில் 35,000 பேரே உளர்.

 

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியம்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா, மொரிசியசு, பிரான்சு (இறியூனியன்) ஆகிய நாடுகளில் சிவாச்சாரியார் நிலைக்குத் தம்மை உயர்த்தியோர் ஆக மொத்தம் 300 குடும்பங்கள் உள. இவர்களின் குலத் தொகை மொத்தம் 2,000க்கும் கூடுதலாகாது.

 

இந்த 37,000 பேருள் அண்மைக் காலத் தலைமுறையினர் பூசனைத் தொழிலில் ஈடுபடுவதை விட்டு அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.

Theetharappan R

unread,
Aug 13, 2014, 9:26:29 PM8/13/14
to vall...@googlegroups.com
"தில்லைவாழ்  அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  திருநீலகண்டத்துக் குயவனாருக்கும் அடியேன்" என்று 
அடியார்கள் எல்லோருக்கும் அடியேன் என்று பாடிய சுந்தரர் வழி வந்தவர்களா இச் சிவாச்சாரியார்கள்? பித்தா 
என்று இறைவனே அடி எடுத்துக் கொடுத்து பாடிய சுந்தரர் வம்சமா தமிழைப் புறக்கணிக்கிறது ?அவர்கள் 
புறக்கணித்தது தமிழை அல்ல சிவபெருமானை என்பதே சரியாக இருக்கும்.மகாபாரதத்தை வேத வியாசர் சொல்ல 
விநாயகர் எழுதியது போல திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லக் கேட்டு நடராஜப் பெருமான் எழுதியதாக 
தில்லையில் வரலாறு உள்ளது.அப்பர் "தமிழோடு இசை பாட மறந்தறியேன்" என்றும், சம்பந்தர் " தமிழ் ஞான சம்பந்தன்"   என்று தன்னைக் கூறிக்கொள்ளுவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 13, 2014, 9:28:07 PM8/13/14
to வல்லமை

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



---------- Forwarded message ----------
From: பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
Date: 2014-08-14 6:10 GMT+05:30
Subject: Re: [MinTamil] Re: சிவாச்சாரியார்களின் திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்பு
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>


குலதெய்வ தரிசனத்திற்காக நெல்லைப் பயணம். உடனடியாக சுபாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலவில்லை.. இந்த இழை குறித்த என் கருத்துக்களை பிறகு தருகிறேன்.. முதலில் சுபாவின் கேள்விகளுக்கு, எனக்குத் தெரிந்த மற்றும் சொல்லப்பட்ட  தகவல்கள் அடிப்படையிலான‌ பதில்கள்.

///சிவாச்சாரியாரகள் என்பவர்கள் யார்?
சிவாச்சாரியார்கள் என்பவர்கள் தன்மை என்ன?
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எத்தகைய நியமங்களைச் செய்ய இவர்கள் நியமிக்கப் பட்டார்கள்? எந்த காலத்திலிருந்து?
எங்கிருந்து வந்தவர்கள் இவர்கள்? அல்லது தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு குடியினரா?
எவ்வகையில் இவர்கள் ஏனைய குருக்கள் (சுவாமிக்கு பூஜை செய்யும் தகுதியுடையோர்) லிருந்து மாறுபடுகின்றனர்.
எவ்வகையில் இவர்கள் ஏனைய மக்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றனர்?
இவர்களது தர்மம் என்ன?
இவர்கள் கடைபிடிக்கும் ஆசாரம் என்ன?
இவர்கள் பேசும் பேச்சு மொழி என்ன? ///


1. ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே அனாதிகால முதல் கோயில் தோன்றிய காலத்திலிருந்தே ஆலய வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். இவர்கள் திராவிட தேசத்தவர்கள். யஜூர் வேதத்தை முக்கியமாய்க் கொண்டவர்கள். ஆதலால் யஜூர் வேதத்தில் இவர்களுக்குத் திராவிட பாடம் என்ற ஒரு பேதம் இருந்து வருகிறது. இதனையே இவர்களும் இவர்களின் முன்னோர்களாகிய பத்ததி கர்த்தர்களும் கையாண்டு வந்திருக்கிறார்கள். – பக். 5, 6, திருச்செந்தூர் முத்தையா பட்டர் எழுதிய சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் .

பிற பிராமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவர்களுக்கும் நிறையவே வேறுபாடுகள். சிதம்பரம் தீக்ஷிதர்களைப் போலவே இவர்களும் மற்ற பிரிவுகளிடம் கொள்வினை கொடுப்பினை செய்வது இல்லை. நடைமுறைகள் நிறையவே மாறுபடும். எனக்குத் தெரிந்து, குருக்கள், சிவாசாரியார் இரண்டும் ஒரே இனத்தின் வெவ்வேறு பெயர்களே. ஐந்து கோத்திரங்கள் மட்டுமே இவர்களுக்கு உண்டு.

இவர்களது பெரும்பாலான வாழ்வியல் நடைமுறைகள், சைவ வேளாளர்களுடையதோடு ஒத்துப் போகின்றன..

சிவாலயங்களில் பூஜை செய்வோர்  சிவாசாரியார்களே.. பிற பிராமணப் பிரிவுகளுக்கு திருமேனி தீண்டும் உரிமை இல்லை.. ஆசாரிய அபிஷேகம் என்னும் சடங்கின் மூலம் சிவ தீக்ஷை பெற்று, பின் பூஜை செய்ய உரிமை பெறுகின்றனர். திருக்கோயில்களில் பூஜை செய்ய, நில மான்யங்கள் இவர்களுக்கு உண்டு.. ஸ்தானீகம் என்னும் முறை மூலமாக, இறைவனது நகைகள், உடமைகளை பாதுகாக்கும் உரிமையும் இவர்களதே. ஒரு கோயிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஸ்தானீக பட்டர்கள்(சிவாசாரியார்கள் இருப்பார்கள்). பூஜை முறை நாட்களை, இவர்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு பூஜைகள் முதலியவற்றை நடத்துவார்கள்.. உற்சவங்களின் போது காப்புக் கட்டுதலை ஒவ்வொரு வருடமும் ஒரு ஸ்தானீக பட்டர் முறை வைத்து ஏற்பார்.

இவர்களுக்கு வழிகாட்டியாக, பொறுப்பேற்பது, ஒரு அத்வைதி கனபாடிகளே.. கோயில் சடங்குகளை வழிகாட்டி நடத்துவது, அஷ்டோத்திர சஹஸ்ரநாமங்கள் ஓதுவது முதலியவற்றை அவரே செய்வார். ஆயினும அவருக்கு திருமேனி தீண்டவோ,அபிஷேகங்கள் செய்யவோ உரிமை இல்லை.. இந்தப் பணிக்காக ஊதியம் மட்டுமே பெறுவர். திருக்கோயில் அதிகார உரிமைகளும் இவருக்கு இல்லை.

சைவ சித்தாந்தம்  சிவாசாரியார்களது உயிர் மூச்சு. சிவ தியானம், சிவ பூஜை முதலிய மிகக் கடுமையான நித்தியகர்மானுஷ்டானங்களை எவ்விடத்திலும் விடாது பின்பற்றுதல் அவசியம். கிட்டத்தட்ட இறைவனுக்கு சமமாக வைத்து மதிக்கப்படுகின்றனர். இவர்களின் பேச்சு மொழி தமிழே.. சிவன் அல்லாது வேறு தெய்வங்களைத் தொழ மாட்டார்கள்.

திரு. கண்ணன் அவர்கள் கூறிய,

///அவர்களுக்கு கருமம் செய்து வைக்க ஒரு அத்வைதி கனபாடிகளால் முடியாது. அவர்கள் ஆசாரம் வேறு//

என்ற கருத்தை ஒரு சில திருத்தங்களோடு ஒப்புக் கொள்ள இயலும்.. அவர்களது சுபகர்மாக்களை, ஒரு யஜூர் வேத கனபாடிகளால் நடத்தி வைக்க இயலும்.அத்வைதி கனபாடிகளான என் சிறிய பாட்டனார், சிவாசாரியார் இல்லங்களில் திருமணங்கள் நடத்தி வைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அசுப கர்மாவின் போது, இறந்தவரின் உடலுக்கு, இறைவனுக்குச் செய்யும் அபிஷேகங்கள் செய்து, ஆசாரிய அபிஷேகத்தின் போது அவருக்கு அளிக்கப்பட்ட மந்திரபூர்வ கவசத்தை அகற்றிய பின்பே, அதற்குண்டான சமஸ்காரங்கள் செய்ய தாத்தா அழைக்கப்படுவார்.

அது போல், லக்ஷ்மி, பார்க்கவி போன்ற பெயர்கள் புழங்குவது, வரலக்ஷ்மி விரதம், கோகுலாஷ்டமி கொண்டாடுதல் முதலியவற்றை சிவாசாரியார் இல்லங்களில் காண இயலாது. இதை பிற பிராமணர் இல்லங்களில் பார்க்கலாம்.

காலமாற்றத்தில் நடந்து விட்ட, வருகிற வழிமுறைகளையும் இங்கு குறிப்பிடுகிறேன்.. இப்போதெல்லாம் ஒரு அத்வைதி கனபாடிகளின் வழிகாட்டுதல் முற்றிலுமாக திருக்கோயில் சடங்குகளில் தவிர்க்கப்பட்டு, சிவாசாரியார்களே அனைத்தையும் கடைபிடிக்கின்றனர்.

முற்காலத்தில், இவர்கள் பிறரோடு சமமாக அமர்ந்து உணவு கொள்வதைத் தவிர்த்ததாகவும், இப்போது அப்படி இல்லை என்றும் என் சிறிய பாட்டனார் சொல்வார்.

எனக்குத் தெரிந்த சில கருத்துக்கள் இந்த இழை குறித்து,

ஒட்டுமொத்தமாக, ஒரு குலத்தையே குற்றம் சொல்வது என் வரையில் சரியான புரிதலாகப் படவில்லை. எல்லா சிவாசாரியார்களுமே இப்படி இல்லை என்பதை நானறிந்த வரையில் மிக உறுதியாகச் சொல்ல இயலும். எங்கள் ஊரில் பஞ்சாயத்துப் போர்ட் பிரசிடெண்டாக இருந்த ஒரு சிவாசாரியார், எல்லா மரபுகளையுமே தவறாது கடைபிடித்தார். பூஜை காலங்கள், காப்புக் கட்டுதல் போன்ற நிகழ்வுகள் அவரது முறையில் வரும் போது, இல்லத்திலிருந்து வெளியே செல்வதையே தவிர்ப்பார்.. அச்சமயங்களில், அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் தேவையிருந்தால் , அப்போது எம்.எல்.ஏ வாக இருந்த திரு.சின்னக்கருப்பத் தேவரிடம், 'சித்தப்பா (அனைவரையும் உறவு முறை வைத்து அழைப்பது மதுரை வழக்கம்) நான் வாரதுக்கில்லை' என்று செய்தி அனுப்பிவிடுவார்.

சிலர் மிக அதிக கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக இருக்கலாம். அவர்கள் எழுந்திருக்காது குலதர்மத்தைக் கடைபிடித்தது தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். சம்பந்தப்பட்டவர்கள், இவற்றக் கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, பிறர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயத்தில், அவர்களையும், அவர்கள் சார்ந்துள்ள கலாசாரத்தையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளுதலும் வேண்டும்.

'ஒட்டுமொத்தமாக ஒரு குலமே இப்படித்தான்' எனப் புரிந்து கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும். திரு.ஆமாச்சு சொல்வது போல், பிராமணர்களிலும் இருக்கும் ///சிவாச்சாரியர் பட்டாரச்சாரியார் ஸ்மார்த்தன் மாத்வி வடமன் வாத்திமன் சோழியன் எண்ணாயிரத்தான் பிருஹத்சரணம் வடகலை தென்கலைன்னு சவுண்டின்னு/// எண்ணற்ற பிரிவுகள் உண்டு. நான் வேதாந்தப் பின்னணியில் இருந்து வந்தவள். என் சித்தாந்தப் புரிதல், சிவாசாரியார்களாலேயே ஏற்பட்டது.

ஒரு அத்வைதி கனபாடிகள்  வேறு பிரிவைச் சேர்ந்தவராயினும்,  அவருக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறாதவர்கள் சிவாசாரியார்கள்.  அது போல் எனக்குத் தெரிந்து, பிற இனத்தவருக்கும் உரிய மரியாதை கொடுத்து மதிப்பாகவே நடத்துவார்கள். மிக இரக்க சுபாவமுள்ளவர்கள்.

எப்போதும் நடுநிலை தவறாத சுபா, தொடர்ந்த விவாதங்களின் போக்கால், இந்த விஷயத்தில் தவறான புரிந்து கொள்ளுதலுக்குத் தள்ளப்பட்டது வருத்தமானது. சிவாசாரியார்கள் திமிரானவர்கள் என்பது மாதிரியான புரிதலை இந்த இழை ஏற்படுத்துகிறது.. உண்மை அப்படியல்ல. அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பது மிகத் தவறான புரிதல். 


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-12 16:04 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​            

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 13, 2014, 9:28:33 PM8/13/14
to வல்லமை

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



---------- Forwarded message ----------
From: பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
Date: 2014-08-14 6:14 GMT+05:30
Subject: Re: [MinTamil] Re: சிவாச்சாரியார்களின் திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்பு
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>


///மறவன்புலவு க. சச்சிதானந்தன் ...

ஆகமங்கள் திருக்கோயில் நடைமுறை விதிகளைத் தருவன. எனினும் ஆகமங்களின் சாரங்களாகப் பத்ததிகள், விதிகள் என்பனவே இன்றைய சிவாச்சாரியார்களின் கைந்நூல்கள். ஏனெனில் ஆகமங்களை முழுமையாகப் படித்தவர் புரிந்தவர் எவரும் இல்லை. இப்பொழுது வாழும் சிவாச்சாரியார்கள் பலருக்கு வடமொழி தெரியாது. மந்திரங்களின் பொருள் தெரியாது. ஆகம விதி தெரியாது.//

அப்படி அல்ல ஐயா!, ஆகமத்துக்கென பாடசாலைகள் உண்டு. பிள்ளையார்பட்டி முதலான ஊர்களில் மிகப் பெரிய பாடசாலைகளில் சிவாகமங்கள் கற்பிக்கப்படுகின்றன. மிகப் பலருக்கு வடமொழி தெரியும். சிறிய வயதிலேயே பாடசாலைப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இன்றைய நிலை தாங்கள் கூறுவதிலிருந்து மிகப் பெரிய அளவில் மாறுபட்டது.. தமிழகம் மட்டுமல்லாது, வெளி தேசங்களிலும் சிறப்பாகப் பணி செய்து வருகின்றனர்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-14 6:10 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 
​      
​     
​      
​           

amachu

unread,
Aug 13, 2014, 10:39:05 PM8/13/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, August 14, 2014 4:42:28 AM UTC+5:30, Maravanpulavu K. Sachithananthan wrote:

உலகம் முழுவதுமாக இன்று 6,000 தொடக்கம் 7,000 சிவாச்சாரியார் குடும்பங்கள் உள. இவர்களுள் 1,000 குடும்பங்கள் இலங்கையில் உள. மலேசியா சிங்கப்பூரில் 150 குடும்பங்கள் வரை உள. அண்மையில் உலகெங்கும் பரவி வாழ்பவராக 150 குடும்பங்கள் உள. ஆக மொத்தம் பிறப்பு வழியாகச் சிவாச்சாரியார் குலத்தில் 35,000 பேரே உளர்.



மரபுகளை காக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் தான் உண்டு. ஆதரிப்போர் தொடர்ந்தால் ஏன் போகப் போகிறார்கள்.

இருக்கும் கோவில்களில் மரபு வழி மக்கள் தொடரவும் பூஜையே நடக்காத கோவில்களில் புர்ச்சி பிரசங்கம் செய்யாது ஆக வேண்டிய காரியத்தை மேற்கொள்ளாதும் அறநிலையத் துறையை யார் தடுத்தது?

--

ஆமாச்சு

தேமொழி

unread,
Aug 13, 2014, 10:46:18 PM8/13/14
to vall...@googlegroups.com
..

On Wednesday, August 13, 2014 7:43:43 PM UTC-7, தேமொழி wrote:

திரு. தீர்த்தாரப்பன் ...

இந்த இழையில் இந்தக் கோணத்தை நான் இதுவரையில் பார்க்கவில்லை, எனவே உங்கள் கருத்தை நான் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன்.  ....

நன்றி...



///ஒட்டுமொத்தமாக, ஒரு குலத்தையே குற்றம் சொல்வது என் வரையில் சரியான புரிதலாகப் படவில்லை. எல்லா சிவாசாரியார்களுமே இப்படி இல்லை என்பதை நானறிந்த வரையில் மிக உறுதியாகச் சொல்ல இயலும். ///

//சிலர் மிக அதிக கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக இருக்கலாம். அவர்கள் எழுந்திருக்காது குலதர்மத்தைக் கடைபிடித்தது தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். சம்பந்தப்பட்டவர்கள், இவற்றக் கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, பிறர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.  ///


மேலும் ....

சராசரி பொதுமக்களுக்கு அந்தப் பிரிவுத் தமிழரில் யார் தமிழுக்கு மரியாதை தர விரும்புபவர்கள் யார் மரியாதை தரவிரும்பாதவர்கள் என்பது கண்டறிய சிரமமாக இருக்கும் பொழுது...

பார்வதி சொல்வது போல ஒரு பொது சபையின்  மரபைக் கடைபிடிக்க விருப்பமில்லாதவர்கள்  அதை முதலிலேயே சொல்லி தங்களை விழாவில் இருந்து விலக்கிக் கொள்ளுதல் கற்றறிந்த பெரியோர்களின் கடமை.




..... தேமொழி


  
On Wednesday, August 13, 2014 6:26:29 PM UTC-7, THEETHARAPPAN R wrote:
"தில்லைவாழ்  அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  திருநீலகண்டத்துக் குயவனாருக்கும் அடியேன்" என்று 
அடியார்கள் எல்லோருக்கும் அடியேன் என்று பாடிய சுந்தரர் வழி வந்தவர்களா இச் சிவாச்சாரியார்கள்? பித்தா 
என்று இறைவனே அடி எடுத்துக் கொடுத்து பாடிய சுந்தரர் வம்சமா தமிழைப் புறக்கணிக்கிறது ?அவர்கள் 
புறக்கணித்தது தமிழை அல்ல சிவபெருமானை என்பதே சரியாக இருக்கும்.மகாபாரதத்தை வேத வியாசர் சொல்ல 
விநாயகர் எழுதியது போல திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லக் கேட்டு நடராஜப் பெருமான் எழுதியதாக 
தில்லையில் வரலாறு உள்ளது.அப்பர் "தமிழோடு இசை பாட மறந்தறியேன்" என்றும், சம்பந்தர் " தமிழ் ஞான சம்பந்தன்"   என்று தன்னைக் கூறிக்கொள்ளுவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


 

செல்வன்

unread,
Aug 14, 2014, 4:18:55 AM8/14/14
to mintamil, vallamai
சட்டமா, சமயமா?

அரசின் சட்டங்கள், சமூக நடைமுறைகள் மக்களின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடுகையில் என்ன செய்வது என்பது சரித்திரகாலம் தொட்டு நிலவும் பிரச்சனை. நீரோ மன்னர் ஆட்சிகாலத்தில் ரோமாபுரியில் ஒரு புதிய கல்ட் (அநாட்களில் கிறிஸ்துவம் கல்ட்டே) தோன்றியது. அவர்கள் பெயர் கிறிஸ்துவர்கள். அந்நாள்வரை மன்னனை மக்கள் வணங்குவது ரோமாபுரி மரபு மட்டுமல்ல, சட்டமும் கூட. ஆனால் இப்புதிய கல்ட்டின் உறுப்பினர்கள் மன்னரை வணங்க மறுத்தார்கள். அதனால் அது தேசதுரோகமாக கருதபட்டு கொலேசியத்தில் நடைபெற்ற போட்டிகளில் கும்பல், கும்பலாக கிறிஸ்துவர்கள் பிடித்துவரப்பட்டு சிங்கங்களுக்கு இரையாக போடபட்டார்கள். தீ வைத்து கொளுத்தபட்டார்கள். நாளாடைவில் இவர்கள் எண்ணிக்கை பெருகவும் இவர்களை என்ன செய்வது என ரோமாபுரி அரசுக்கு தெரியவில்லை. கடைசியில் அந்த சட்டத்தில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கபட்டது.

அதற்குமுன்னரே இந்தியாவில் இப்பிரச்சனை எழுந்திருந்தது. அசோகர் பன்டைய இந்தியாவின் முதல் பேரரசை எழுப்பினார். மவுரிய மன்னர்களில் சிலர் சமணர், சிலர் பவுத்தர், சிலர் ஆஜிவகர். குடிகளில் பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் தொல்பரமபி பின்பற்றும் பழங்குடியினர், கிரேக்கர் என ஒரு கலவையான அரசை ஸ்தாபித்த அசோகர் தான் செதுக்கிய மூன்றாவது கல்தூணில் "பிராமணர்கள் மற்றும் சமணர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்களில் தளர்ச்சி காட்டபடவேண்டும்" என்பதை சட்டமாக செதுக்கி வைத்தார். அரச மதம் பவுத்தமாக இருக்கையில் இப்படி பிராமணர்கள், மற்றும் ஜைனர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்கள் தளர்த்தபட்டு முழு உலகிற்கும் மற்றவரது மத நம்பிக்கையை எப்படி மதிப்பது என்பதற்கு அசோகர் சான்றாக விளங்கினார்.

மிடில் ஏஜஸ் எனும் காலத்தில் ஐரோப்பாவில் அரசின் சட்டங்கள் மக்களின் மத உரிமையை மீறியதால் கூட்டம் கூட்டமாக மக்கள் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தனர். அதனால் அமெரிக்காவில் அரசின் சட்டங்கள் மத உரிமையில் குறுக்கிடுகையில் மத உரிமைக்கே முன்னுரிமை என்றும் அப்படி அந்த மத உரிமையை முடிந்தவரை காப்பாற்றவே சட்டங்களில் விதிவிலக்குகள் இருக்கவேண்டும் என்றும் வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் மட்டுமே மத உரிமைகளை சட்டங்கள் மீறலாம் என்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு 1963யிலும், அமெரிக்க காங்கிரஸ் 1993யிலும் தீர்ப்பளித்தன.

இதன்படி மதகுழுக்களுக்கு அளிக்கபட்ட விதிவிலக்குகள்:

1930களில் அமெரிக்காவெங்கும் மதுவிலக்கு அறிமுகபடுத்தபட்டபோது, கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒயின் உற்பத்தி செய்யவும், சர்ச்சுகளில் ஒயினை பரிமாறவும் உரிமை வழ்ங்ககபட்டது

அமெரிக்க பள்ளிகளில் சேர தடுப்பூசி போடுதல் கட்டாயம். ஆனால் ஜெகோவாஸ் விட்னஸ் உள்ளிட்ட மதகுழுக்கள் ரத்தத்தை எடுப்பது மத நம்பிக்கைக்கு எதிரானதாக கருதியதால், தடுப்பூசி போடுவதில் இருந்து விதிவிலக்கு பெற அனுமதி அளிக்கபட்டது. அதன்படி பள்ளியில் சேர விரும்பும் எக்குழந்தையின் பெற்றோரும் "தடுப்பூசி போடுவது எம் மதநம்பிக்கைக்கு எதிரானது" என கூறினால் அக்குழந்தைகள் தடுப்பூசி போடாமல் பள்ளிகளில் அனுமதிக்கபடுவார்கள்.

இந்தியாவில் சீக்கியர்கள் கிர்பான் எனும் அலங்கரிக்கபட்ட குத்துவாளை எப்போதும் சுமந்திருப்பது மதகடமையாக்கபட்டு உள்ளது. கிர்பான் கத்தியை பாராளுமன்றம், விமானங்கள் என எங்கும் தடையின்றி எடுத்து செல்ல கிட்டத்தட்ட பல உலகநாடுகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்தியாவில் பாராளுமன்றம் முதல் விமானம் வரை எங்கும் கிர்பான் கத்தியை கொண்டுசெல்லலாம். அமெரிக்க, கனடிய பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் கிர்பான் கத்தியை பள்ளிக்கு கொண்டு சென்றது பிரச்சனை ஆனதால், வழக்கு தொடரபட்டு கிர்பானுக்கு தடை விதிப்பது அமெரிக்க, கனடிய அரசியல் சட்டங்களுக்கு முரணானது என தீர்ப்புகள் வழங்கபட்டு உள்ளன. அதனால் சவரபிளேடை கூட கொண்டுசெல்ல தடை இருக்கும் பள்ளிகளில் கிர்பான் கத்தியை கொன்டுசெல்ல எத்தடையும் இல்லை.





( கிர்பான் கத்தி)

இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் வந்தே மாதரம் பாடல் தான் தேசியகீதம் போல் காங்கிரஸ் கட்சி பொதுகூட்டங்கள் எங்கும் பாடப்பட்டது. அல்லாவை தவிர யாரையும் வணங்கமாட்டோம் என உறுதிபூன்ட முஸ்லிம்கள் "தாயை வணங்குவோம்" என பொருள்படும் வந்தேமாதரம் பாடலை பாட மறுத்ததால் சர்ச்சைகள் எழுந்து, அதன்பின் ஜனகண மண தேசியகீதமாக தேர்ந்தெடுக்கபட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒருமுறை வந்தேமாதரம் பாடல் பாடபட்டபோது அதை எதிர்த்து முஸ்லிம் எம்பிக்கள் சிலர் வெளிநடப்பு செய்தார்கள்.

தமிழ்நாட்டில் ஊராட்சி தேர்தல்கள் நடந்து மேயர்கள் தேர்ந்தெடுக்கபட்ட காலத்தில் மேயர்களை எப்படி விளிப்பது எனும் விவாதம் எழுந்து இங்கிலாந்து முறைப்படி "வர்ஷிப்புல் மேயர்" என்பதை தமிழாக்கி "வணக்கத்துகுரிய மேயர்" என அழைப்பது என முடிவெடுக்கபட்டது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வணக்கத்துகுரிய எனும் அடைமொழியை மேயருக்கு பயன்படுத்த முடியாது என கூறின.


அமெரிக்கபள்ளிகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து தடைசெய்யபட்ட விஷயம். தேசியகீதம் பாடபடுகையில் எழுந்து நிற்கும் அவசியம் இல்லை. அவை மரபு கருதி அனைவரும் நின்றாலும் சிலர் கொள்கை காரணமாக எழுந்து நிற்க மறுப்பதுண்டு. அது அங்கே பேச்சு சுதந்திரமாக தான் கருதபடுகிறது. அமெரிக்க கொடியை எரிக்க அமெரிக்காவில் எத்தடையும் இல்லை.

ஆக ஜனநாயக நாடுகளில் அரசின் சட்டங்களில் இருந்தும், நடைமுறைகளில் இருந்தும் மதரீதியான விதிவிலக்கு மக்களுக்கு அளிக்கப்ப்ட்டே வந்துள்ளது. அப்பாரம்பரியத்தை கட்டிகாப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 14, 2014, 6:27:03 AM8/14/14
to mintamil, vallamai
இரணியனது ஏவலால் அந்தணன் ஒருவன் பிரகலாதனுக்கு வேதம் ஓதுவிக்கத் தொடங்குதல்

6336. ‘என்று, ஓர் அந்தணன் எல்லையில்,
    அறிஞனை ஏவி,
“நன்று நீ இவற்கு உதவுதி
    மறை “ என நவின்றான்.
சென்று மற்று அவன் தன்னொடும்
    ஒரு சிறை சேர்ந்தான்;
அன்று நான்மறை முதலிய
    ஓதுவான் அமைந்தான்.
21

உரை
  
 
ஆசிரியன் ‘இரணியாயநம ‘என்று கூறுமாறு பணிக்கப் பிரகலாதன் ‘ஓம் நமோநாராயணாய ‘என்று கூறுதல்

6337. ‘ஓதம் புக்கு, அவன், “உந்தை பேர்
    உரை “ எனலோடும்,
போதத் தன் செவித்தொளை இரு
    கைகளால பொத்தி,
“மூதக்கோய்! இது நல்தவம்
    அன்று “ என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள்
    பெயரினை விரித்தான்.
22

உரை
  
 
பிரகலாதனது திருமால் பத்தியைக் கண்டு ஆசிரியன் அஞ்சி நடுங்கி அவனைக் கடிந்துரைத்தல் (6338-6339)

6338. “ஓம் நமோ நாராயணாய! “ என்று
    உரைத்து, உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக்கையும்
    தலையின்மேல் தாங்கி,
பூ நிறக் கண்கள் புனல் உக,
    மயிர் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன்;
    அந்தணன் நடுங்கி.
23

உரை
  
 
6339. “கெடுத்து ஒழிந்தனை, என்னையும்
    உன்னையும்; கெடுவாய்!
படுத்து ஒழிந்தனை; பாவி!
    எத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று
    பகர, நின் அறிவின்
உரை



 
 
குரு இரணியனை அடைந்து நிகழ்ந்த செய்தியைக் 
கூறுதல் (6349-6350)

6349.
34

உரை
  

6350. “‘எந்தை! கேள் : எனக்கு இம்மைக்கும்
    மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைதற்கும்
    அடாதன செப்பி,
‘முந்தையே உணர்ந்தேன் பொருள்
    முற்றும் ‘என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன் வேதம் ‘‘ என்று
    உரைத்தனன், வணங்கி.
35

உரை
  
 
இரணியன் குருவை நோக்கித் தன் மகன் கூறிய சொல்லைக் கூறுமாறு பணித்தல்

6351. ‘அன்ன கேட்டவன், “அந்தண!
    அந்தணர்க்கு அடாத,
முன்னர் யாவரும் மொழிதரும்
    முறைமையின் படாத,
தன்னது உள்ளுறும் உணர்ச்சியால்
    புதுவது தந்தது,
என்ன சொல்? அவன் இயம்பியது
    இயம்புதி ‘‘ என்றான்.
36

உரை
  
 
குரு ‘அச் சொல்லைக் கூறின் நான் நரகம் எய்துவேன் ‘எனக் கூறுதல்

6352. “அரசன் அன்னவை உரைசெய,
    மறையவன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்த்திடா, “
    செவித்தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு
    உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து
    உகும் ‘‘ என நவின்றான்.
37


பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மேற்கண்ட   
இரண்யன் வதைப் படலப் பாடல்களுக்கு உரை எழுதும்போது உரையாசிரியர் (த.இ.பல்கலை) குறிப்பிடுகிறார். 
இரண்யன் அரசு மறைவலான் கடைசி வரை “நாராயணன்” பெயரைச் சொல்லவில்லை. சொன்னால் நாக்கு வெந்துவிடும்; நரகம் கிட்டுமென்றான்.

சிங்கள ஆட்சியாளர்களை மகிழ்விக்க இவ்வாறு சிவாச்சாரியர்கள் செய்திருக்கலாம் என்று முகநூலில் ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். குல ஆச்சாரத்திற்கு அவர்கள் செய்தார்களா, சைவ சமய ஆச்சாரமா, சிங்களவரைத் திருப்தி செய்யவா அல்லது வேறு காரணமா என்பது அவர்கள் சொன்னால் அன்றி காரணம் எதுவென்று நாமறியோம்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

N. Ganesan

unread,
Aug 14, 2014, 8:27:35 AM8/14/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, August 11, 2014 10:35:08 PM UTC-7, N. Kannan wrote:

சிவாசாரியர்கள் தமிழ்மொழி வாழ்த்திற்கு ஏன் எழுவில்லை என யோசித்தால், அவர்களது குலதர்மம் புரியும். சிவ தீக்ஷை பெற்ற பின் சிவ நாமம் ஒன்றுக்குத்தான் அடிபணிவதாக பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுகின்றனர். அவர்களுக்கு கருமம் செய்து வைக்க ஒரு அத்வைதி கனபாடிகளால் முடியாது. அவர்கள் ஆசாரம் வேறு.


ஆமாம். சிவலிங்கத்தைத் தொடும் உரிமை சிவாச்சார்ய குருக்களுக்கே உண்டு. அதனால் தான் நாயன்மார்கள் யார்? - என
தமிழில் முதன்முதல் பட்டியலிடும் ”திருத்தொண்டத்தொகை” குருக்களை ‘முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்’ என்கிறது.

ஸ்மார்த்தர்கள் இப்பணியை ஏற்றால் நாட்டுக்கு தீமை என்கிறார் திருமூலர்:

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற் 
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் 
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே 
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.  -திருமந்திரம்

பொழிப்புரை :

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

குறிப்புரை விரிவாக எழுதியிருக்கிறார்கள். படிக்க இங்கே செல்க:

நா. கணேசன்

 
நா.கண்ணன்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Aug 14, 2014, 8:44:33 AM8/14/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, August 13, 2014 9:30:02 PM UTC-7, chandrasekaran1008 wrote:
This is correct. You will have supporting evidence from Maraimalai Adigal's book 'Velaalar Naagareegam'.  Also, Tamil culture is ancient and prior to Vedic culture and those who were doing the work of a priest were none other than the tamils, later converted to brahminhood with a crossed sacred thread when Vedic culture took dominance. That is why there are so many sects and Gothrams (Koottams) and 'vadama' is the one from the north to differentiate from the others!

Teekayseer


பார்ப்பாருக்கு என்ன வேலை? - என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார்.

"காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
     கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்
     மாவொடு பட்ட நிமித்தம் கூறலும்
     செலவுறு கிளவியும் செலவுஅழுங்கு கிளவியும்
     அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய".        தொல். பொ. 177

சிவாச்சாரியார்கள் இவரினின்றும் வேறானவர்கள். இதைத்தான் திருமந்திரத்தில்
திருமூலர் வலியுறுத்தியுள்ளார்.

நா. கணேசன்

 


2014-08-14 8:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, August 12, 2014 5:40:59 PM UTC+5:30, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

​இன்னும் சரிய்யாகக் கூறவேண்டுமென்றால் இலங்கையில் வளர்ந்த சைவம் வேளாள பிராஅமணர்கள் என்றழைக்கப்பட்ட சைவப்பிள்ளைகளால் வளர்க்கப்பட்ட சமயம்.  பிராமணர்கள் கடல்கடக்க இயலாத நிலையில் ஆகமக் கோவிகளை நிர்வகித்து ​ஆகம அடில்லடையில் பூசை நடத்தியவர்களும் இந்த சைவப்பிள்ளைமார்களே


வேளாளர்கள் எப்போது வேளாள பிராமணர்கள் ஆனார்கள்?

நா. கணேசன் 

amachu

unread,
Aug 14, 2014, 8:52:05 AM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, August 14, 2014 6:14:32 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Wednesday, August 13, 2014 9:30:02 PM UTC-7, chandrasekaran1008 wrote:
This is correct. You will have supporting evidence from Maraimalai Adigal's book 'Velaalar Naagareegam'.  Also, Tamil culture is ancient and prior to Vedic culture and those who were doing the work of a priest were none other than the tamils, later converted to brahminhood with a crossed sacred thread when Vedic culture took dominance. That is why there are so many sects and Gothrams (Koottams) and 'vadama' is the one from the north to differentiate from the others!

Teekayseer


பார்ப்பாருக்கு என்ன வேலை? - என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார்.

"காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
     கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்
     மாவொடு பட்ட நிமித்தம் கூறலும்
     செலவுறு கிளவியும் செலவுஅழுங்கு கிளவியும்
     அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய".        தொல். பொ. 177

சிவாச்சாரியார்கள் இவரினின்றும் வேறானவர்கள். இதைத்தான் திருமந்திரத்தில்
திருமூலர் வலியுறுத்தியுள்ளார்.


தொல்காப்பியம் சமண நூல்னா அது ஊதும் சமண பார்ப்பாரா இருக்கப் போகுது. :)

--

ஆமாச்சு

amachu

unread,
Aug 14, 2014, 8:59:57 AM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, August 14, 2014 5:57:32 PM UTC+5:30, N. Ganesan wrote:
ஆமாம். சிவலிங்கத்தைத் தொடும் உரிமை சிவாச்சார்ய குருக்களுக்கே உண்டு. அதனால் தான் நாயன்மார்கள் யார்? - என
தமிழில் முதன்முதல் பட்டியலிடும் ”திருத்தொண்டத்தொகை” குருக்களை ‘முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்’ என்கிறது.

ஸ்மார்த்தர்கள் இப்பணியை ஏற்றால் நாட்டுக்கு தீமை என்கிறார் திருமூலர்:

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற் 
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் 
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே 
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.  -திருமந்திரம்

பொழிப்புரை :

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.


அர்ச்சிப்பவனும் பார்ப்பான் தான். பேர் மட்டும் கொள்ளாது சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் கொண்ட பார்ப்பான்.

கண்டிப்பா பட்டாச்சாரியர் சிவன் கோவிலில் பூஜை செய்ய முடியாது. ரெண்டும் பார்ப்பு தான்.

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Aug 14, 2014, 9:15:26 AM8/14/14
to vall...@googlegroups.com
On Tuesday, August 12, 2014 7:19:22 AM UTC-7, Suba.T. wrote:
எனது ஃபேஸ்புக் பதிவில் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் மேலும் வழங்கியிருக்கும் தகவல்களை இந்த இழைக்கு தொடபு இருப்பதால் இங்கே தொகுப்பாகப் பதிகின்றேன். 



சிவாச்சாரிய மரபினர் வழங்கும் செய்திகளைத் தொகுத்துவழங்கப்பட்டுள்ளன.
சிவாச்சார்யர்கள் தமிழ்ப் பண்டாரங்கள் போன்றோர்
- காஷ்மீரில் இருந்து வந்த ஆகமங்களும், தமிழ்ச் சைவமும் கலந்து 
சைவாகமங்களையும், அவற்றின் பூஜாவிதிகளையும் குருக்கள் ஏற்படுத்தினர்,

ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் ப்ராமின்ஸ் என்ற பெயரில் வந்து
குடியேறும் கூட்டங்கள் பல. விஜயநகர ஆட்சியில் இருந்து இன்றுவரை
வரத்து அதிகமாக வளர்ச்சி பெறுகிறது. சொந்த ஊரில் எப்படியோ.
ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்தால் எல்லாம் ப்ராமின்ஸ்.

நா. கணேசன்

 
  • மறவன்புலவு க. சச்சிதானந்தன் மாதொரு பாக னார்க்கு 
    வழிவழி யடிமை செய்யும்
    வேதியர் குலத்துள் தோன்றி 
    மேம்படு சடைய னாருக்கு
    ஏதமில் கற்பின் வாழ்க்கை 
    மனையிசை ஞானி யார்பால்
    தீதகன் றுலகம் உய்யத் 
    திருவவ தாரஞ் செய்தார். 

    உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமானுக்கு வழிவழியாக அகத்தடிமை செய்து ஒழுகும் ஆதி சைவர் குலத்தில் தோன்றிய மேம்பட்ட சடையனாருக்குக், குற்றமற்ற கற்பினை உடைய வாழ்க்கைத் துணைவியாராகிய இசைஞானியாரிடத்து, உலகிலுள்ள உயிர்கள் யாவும் தீநெறியினின்றும் நீங்கி நன்னெறி அடைய ஒரு பெருமகனார் (சுந்தரர்) தோன்றியருளினார்.
    (பெரியபுராணம், திருமலைச் சருக்கம் 149ஆவது பாடல்)

  • மறவன்புலவு க. சச்சிதானந்தன் உலகெங்கும் சைவத் திருக்கோயில்களில் விதிகளுக்கு அமையப் பூசனை செய்வோர் சிவாச்சாரியார்கள். 

    பிராமணர்கள் திருக்கோயில்களுள் நுழைவதில்லை, ஆகமங்கள் அவர்களை நுழைய விடுவதில்லை. பிராமணர் கையால் திருநீறு வாங்குவது தவறு என்றவர் தவத்திரு ஆறுமுகநாவலர்..

    திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி உடனாய நெல்லையப்பர் கோயிலுக்குள் சிருங்கேரி சங்கராச்சாரியார் நுழைந்துவிட்டார். அதனால், தீட்டுக் கழித்தல் சடங்கு செய்து திருக்கோயில் புனிதமாக்கிய பின்னரே பூசனைகள் தொடங்கின.

    திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி உடனாய நெல்லையப்பர் கோயில் திருப்பணிக் குழுத் தலைவராகக் காஞ்சி சங்கராச்சாரியாரை அழைத்தனர். நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினர் அடியவர்கள்.

    இராமேச்சரம் கோயிலுக்குள் சங்கராச்சாரியார்கள் எவரும் செல்லக்கூடாது என்பது நெடுங்கால மரபு, இன்றுவரை தொடர்கிறது.

    தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளா மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட சிவாச்சாரியார்களை அந்ததந்த மாநிலப் பிராமணர் சங்கங்கள் உறுப்பினராகச் சேர்ப்பதில்லை. எனவே அவர்கள் தமக்கெனச் சிவாச்சாரியார் சங்கம் வைத்திருக்கின்றனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் தமிழகச் சங்க அலுவலகம் உண்டு.

    எவரும் சிவாச்சாரியார் ஆகலாம். திருமூலர் திருமந்திரம் பாடல் 511க்கு அருணைவடிவேல் முதலியார் எழுதிய நீண்ட உரையில் ஒருவர் எவ்வாறு சிவாச்சாரியார் ஆகலாம் என்பதை விளக்கி உள்ளார். சைவர், சைவக் குருக்கள், தேசிகர், நாயானார், சிவாச்சாரியார் என்பன படிநிலைகள்.
  • மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகமங்கள் திருக்கோயில் நடைமுறை விதிகளைத் தருவன. எனினும் ஆகமங்களின் சாரங்களாகப் பத்ததிகள், விதிகள் என்பனவே இன்றைய சிவாச்சாரியார்களின் கைந்நூல்கள். ஏனெனில் ஆகமங்களை முழுமையாகப் படித்தவர் புரிந்தவர் எவரும் இல்லை. இப்பொழுது வாழும் சிவாச்சாரியார்கள் பலருக்கு வடமொழி தெரியாது. மந்திரங்களின் பொருள் தெரியாது. ஆகம விதி தெரியாது.

    கண்ணகி சமணப் பெண். தமிழ்ப் பெண். சைவ சமயத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவருக்குக் கோயில்களை அமைத்தனர். சமணப் பெண்ணான கண்ணகைக்குக் கோயில். சைவ சமயச் சிவாச்சாரியார் குடமுழுக்குச் செய்வார். தவத்திரு ஆறுமுக நாவலர் இதனைக் கண்டித்தவர். சமணச் செட்டிச்சியின் கோயிலில் சிவாச்சாரியார் பூசை செய்யக் கூடாது என எழுதியவர்.

    சுந்தரர் பிறப்பு வழி ஆதிசைவர் அல்லது சிவாச்சாரியார். அவர் உணவு உண்டு வளர்ந்த வீடு நரசிங்க முனையர் என்ற அரசனின் வீடு. திருமணமோ பரவை (பரத்தைப் பெண்), சங்கிலி என ஆதிசைவர் மரபுக்கு அப்பால்.

    இவை தமிழரின் சமூக நியதிகள். திராவிடத்துக்கு அப்பால் வடக்கே ஆகம வழிபாடு இல்லை. அங்கே சிவாச்சாரியார் முறைமை இல்லை. 

    ஆனாலும் காசி, நேபாளம் அருள்மிகு பசுபதி நாதர் கோயிலார் ஆகம மரபுகளைப் பின்பற்றுவர். அருள்மிகு பசுபதி நாதர் கோயிலில் தென்னாட்டுச் சிவாச்சாரியார்களுக்கே பூசை உரிமை. அதே போல அருள்மிகு பத்திரிநாதர் கோயிலிலும் கேரளத்து சிவாசாரியார்களுக்கே பூசை உரிமை.

    வடநாட்டுப் பூசகருக்குப் பண்டாக்கள் எனப் பெயர். பண்டாரம் என்ற தமிழ்ச் சொல்லே பண்டா எனக் குறுகிற்று. காசியில் இன்றும் இரு காலப் பூசைகளைச் செய்விப்பவர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. அவர்கள் மட்த்திலிருந்து காலையும் மாலையும் நாதசுவரம் தவிலுடன் பூசனைப் பொருள்கள் அருள்மிகு விசுவநாதர் கோயிலுக்குப் போகும். சம்போ ஊர்வலம் என அந்த ஊர்வலத்தை அழைப்பர்.

    விசாலாட்சி அம்மன் கோயில் முழுக்க முழுக்கத் தமிழகச் சிவாச்சாரியார்களின் பூசை முறையில் நடைபெறும். அதே போல மாலை நேரக் கங்கை ஆரத்தியை நிகழ்த்துவோர் பண்டாக்கள், அல்லது பண்டாரங்கள், பிராமணர் அல்லர்.

    பிராமணர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை அற்றவர்கள். வடநாட்டில் பிராமணர் மரக்கறி அல்லாத உணவு உண்பதும் நடைமுறை. வங்காளத்தில் மீன் மரக்கறி உண்வே.

    இந்தப் பின்னணிகளைக் கொண்டு சிவாச்சாரியார் கடமைகளுக்கான கட்டமைப்பை புரிந்து கொள்கிறேன்.
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Aug 14, 2014, 11:54:07 AM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இந்த இழையை விட மற்றோர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைப்பது அரிது.  எனவே...

நாத்திகர்களை குறை கூறும் ஆன்மீகவாதிகள் கவனத்திற்கு இதைக் கொண்டுவர இதுவே சரியான நேரம்.  
therefore, the morel of the story is  ... என்று குறிப்பிடாமலே தெளிவாகப் புரிவதால் நிகழ்சிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது...

[1]

பெரியார் மற்றும் திரு.வி.க நல்ல நண்பர்கள். ஈரோடு பக்கம் வரும் பொழுது எல்லாம் திரு.வி.க தன் தோழர் வீட்டில் தங்குவது வழக்கம்.

காலம் போன போக்கில், இருவரும் வெவ்வேறு திசை நோக்கி பயணம் செய்தனர். பகுத்தறிவு என்றார் பெரியார். ஆனால் பழுத்த சிவ பக்தரானார் திரு.வி.க.

பல ஆண்டுகளுக்கு பின், வேலை நிமித்தமாக திரு.வி.க ஈரோடு வந்து சேர்ந்தார். பெரியார் வீட்டில் தங்குவதாக அவருக்கு உத்தேசம் இல்லை. ஆனால் பெருந்தன்மை கொண்ட பெரியார், அவரை தமது வீட்டிக்கு வரும் படி அன்பாக பணிந்து ஒரு தூது அனுப்பினார்.

தோழன் சொல்லை தட்ட விரும்பாமல், திரு.வி.க அவர் வீட்டில் தங்க இசைந்தார். காலை குளித்து முடித்த பிறகு, குளியலறை விட்டு வெளியே வந்து திரு.வி.க, ஒரு அதிசயமான காட்சியை கண்டார்.

பழுத்த பகுத்தறிவு கொண்ட பெரியார், தம் கையில் ஒரு விபூதி மடலுடன், தன் நண்பருக்காக காத்து கொண்டு நின்றார். முக மலர்ச்சியுடன் திருநீர் இட்டு கொண்டார் திரு.வி.க. இருவரும் அகம் மகிழ்ந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

இச்சிறு சம்பவத்திலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் நிறைய உண்டு. சிந்தியுங்கள்.

ref: https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/

&

http://esalathan.blogspot.com/2009/12/blog-post_09.html

    

[2]


1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில் திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.

அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள்.

அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர்.

பெரியார் அதைப் பவ்வியமாக ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் இச்செயல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.


அப்போது அவர்களுக்குப் பெரியார் சொன்ன பதில்:

" நான் எங்கே பூசிக் கொண்டேன்? அடிகளார் பூசிவிட்டார்.

அவ்வளவு பெரியவர் இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார்.

அந்த நேரத்தில் நான் தலையைத் திருப்பிக் கொள்வது

அவரை அவமதிப்பது போல ஆகாதா?"என்றாராம் பெரியார்.


மனிதர்களை மதிப்பது மட்டுமே,

கடவுளை விடவும்,

மதங்களை விடவும்

மதங்கள் எழுதி வைத்திருக்கும்

வேதங்களை விடவும்,

மேன்மையானது என்று

தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர் தான் தந்தை பெரியார்..


[3]

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.


இது கல்கியின் பெருந்தன்மை.

ref: http://tvrk.blogspot.com/2010/12/blog-post_26.html


..... தேமொழி


சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 14, 2014, 12:28:12 PM8/14/14
to vallamai, mintamil
மனிதர்களை மதிப்பது மட்டுமே,

கடவுளை விடவும்,

மதங்களை விடவும்

மதங்கள் எழுதி வைத்திருக்கும்

வேதங்களை விடவும்,

மேன்மையானது

அருமையான பகிர்வு திருமிகு தேமொழி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-08-14 21:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

amachu

unread,
Aug 14, 2014, 1:03:13 PM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, August 14, 2014 9:24:05 PM UTC+5:30, தேமொழி wrote:
இந்த இழையை விட மற்றோர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைப்பது அரிது.  எனவே...

நாத்திகர்களை குறை கூறும் ஆன்மீகவாதிகள் கவனத்திற்கு இதைக் கொண்டுவர இதுவே சரியான நேரம்.  
therefore, the morel of the story is  ... என்று குறிப்பிடாமலே தெளிவாகப் புரிவதால் நிகழ்சிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது...


மத்தநாட்டில் நாத்திகர்கள் படும் பாட்டையும் தொன்றுதொட்டு நாத்திகரகளுக்கு இடமளித்து வரும் நாட்டிற்கு இது கூட செய்யலைன்னா எப்படி?

இங்கே தான் அப்படி பேசிக் கொண்டு திரியலாம்.

அது சரி பெருந்தன்மையுடையவர் சுதந்திர தினம் கொண்டாடலையே ஏன்?

அண்ணாக்கு தான் அது இருந்தது ;-)

செல்வன்

unread,
Aug 14, 2014, 1:05:56 PM8/14/14
to vallamai, mintamil

2014-08-14 10:54 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மனிதர்களை மதிப்பது மட்டுமே,

கடவுளை விடவும்,

மதங்களை விடவும்

மதங்கள் எழுதி வைத்திருக்கும்

வேதங்களை விடவும்,

மேன்மையானது என்று

தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர் தான் தந்தை பெரியார்..


அதே பண்பாட்டை பின்பற்றி சிவாசாரியார்களின் மதநம்பிக்கையை மதித்து போற்றுவோம். அவர்கள் விரும்பாத ஒரு செயலை செய்ய அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்பதை பெரியாரின் உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.

செல்வன்

unread,
Aug 14, 2014, 1:09:05 PM8/14/14
to vallamai, mintamil
பெரியார் குன்றகுடி அடிகளாரின் மதநம்பிக்கையை மதித்து விபூதி பூசினார்

அதே சமயம் தன் நம்பிக்கையை அடிகளார் மதித்து கருப்பு சட்டை போட்டுகொள்ளவேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அடிகளாருக்கு சிக்கன் கொடுத்து சாப்பிட சொல்லவில்லை.

மற்ரவது மத்நம்பிக்கையை பெரியாரே மதிக்கிறார். அதை அவரது சீடர்கள் பின்பற்ரவேண்டாமா?


தேமொழி

unread,
Aug 14, 2014, 2:43:34 PM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.///



இது கண்ணில் படவில்லையா?  


அடுத்தவர்கள் மனம் புண்படுமாறு தனது செய்கை அமைந்துவிடுமோ என ஒதுங்கிக் கொள்வது பெருந்தன்மை உடையவர் செயல்.




..... தேமொழி

தேமொழி

unread,
Aug 14, 2014, 4:43:56 PM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கீழுள்ள தகவலைத்தான் முதலில் தருவதற்காகத் தேடினேன்..இப்பொழுது கிடைத்துவிட்டது.....




[...]பெரியார் சிறந்த மனிதநேயர். எதிரே அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார்.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.
 ஒரு முறை பெரியாரின் வீட்டுக்கு திருவிக வந்திருந்தார். குளித்துவிட்டு வெளியே வந்த திருவிகவுக்கு திருநீறு எடுத்து வந்து கொடுத்தார் பெரியார். "வழக்கமாக குளித்து விட்டு திருநீறு பூசிக் கொள்ளும் பழக்கமுடையவர் நீங்கள், அதனால் எங்கள் வீட்டின் விருந்தினரான தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது என் கடமை' என்றார் பெரியார்.
 அதேபோல, திருச்சியில் ஒரு கல்லூரியில் விநாயகர் சிலை திறந்து வைக்க அவரை அழைத்தபோது மறுப்பு தெரிவிக்காமல் வந்து திறந்து வைத்தவர் பெரியார்' என்றார் இளங்குமரனார்.[...]




மேன்மக்கள் என்றும் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதே தமிழ் மூதுரை 

செல்வன்

unread,
Aug 14, 2014, 6:15:03 PM8/14/14
to vallamai, mintamil

2014-08-14 15:43 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரியார் சிறந்த மனிதநேயர். எதிரே அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார்.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.


இது மாதிரி பெருந்தன்மை எல்லாம் தாலி கட்டின மனைவியிடம் காட்டபடவில்லை போல!!

திராவிடர் கழக அதிகாரபூர்வ வலைதளத்தில் இருந்து:

http://www.unmaionline.com/2009/october/01-15_2009/page14.php

சின்னத்தாயம்மாளின் வீட்டில் மாமிசம் சமைப்பது பெரிய தீட்டுக் காரியமாக கருதப்-பட்டதால், நாகு விறகை வெளியில் வைத்து ராமனுக்காக தனியாக மாமிசம் சமைப்பாள். ராமசாமியும் மாமிசம் சாப்பிடும் அபசார காரியம் செய்கிறவன் என்பதால் அவன் அந்த வீட்டு சமையலறைக்குள்ளே வரக்கூடாது என்பது தான் சின்னத் தாயம்மாளின் விதி. இதனால் நாகு சமைத்து முடித்து, கணவனுக்கு இந்த உணவை வெளியில் வைத்துப் பரிமாறி, உடனே போய் தலை முழுகி தீட்டை போக்-கினால் தான் வீட்டினுள் போக முடியும் என்கிற நிலை. இந்த லட்சணத்தில் வெள்ளி, சனி என்று பல நாட்கள் நாகு விரதம் வேறு இருந்தாக வேண்டும். விரதத்திற்கான பிரத்தியேக உணவு, பொது சமையலறையில் மூடி வைக்கப்பட் டிருக்கும். எவ்வளவு பசி என்றாலும் தலை முழுகி விட்டுத்தான் சமையலறைக்குள் போய் அந்த உணவை எடுத்துச் சாப்பிடவே முடியும். இப்படி நாகு பசியோடு போய் உணவை எடுத்துச் சாப்பிட கைவைத்தால், படக் என்று ஒரு எலும்பு துண்டு அதில் தலை நீட்டும். எல்லாம் ராமசாமியின் கைங்கர்யம் தான் என்று அவன் குறும்பை எண்ணிச் சிரித்-தாலும், அத்தோடு நாகம்மையின் விரதம் அம்பேலாகிவிடுமே. ஏன்டா, விரதம் இருக்குற பொண்ணை எப்படி பண்ணுற? என்று சின்னத்தாயம்மாள் ராமசாமியை எவ்வளவோ திட்டிப்பார்த்தார், ஊகூம், சரியாக நாகம்மாளின் விரத உணவி மட்டும் எலும்புத் துண்டுகள் முளைத்துக் கொண்டே இருக்க, இவன் திருந்த மாட்டான் நாகு. இந்த புருஷனை கட்டிக்கிட்டு நீ விரதம் இருந்து கிழிச்ச மாதிரி தான். போதும், விரதம் இருந்தது, விடு என்று மாமியார் முத்தாய்பு வைத்து விட, அத்தோடு நாம்மாளின் விரதப் படலம் முடிந்தே போனது.

இருந்தாலும் நாகு தன் மாமியாரை பின்பற்றி கோயிலுக்கு போவது, தாலியை ஒரு பெரும் பொக்கிஷமாய் மதித்துக் கொண்டாடு-வது என்றே இருந்து வந்தாள். அப்படி ஒரு சமயம், ஏதோ திருவிழாவின் போது, வீட்டுப் பெண்களோடு நாகுவும் கோயிலுக்கு போக நேர்ந்தது. அப்போது என்று பார்த்து, சில மைனர் பையன்கள், யாரும்மா நீ, இந்த கோயில்ல நீ தான் புது தாசியாமே என்று கேட்டுக்கொண்டு அவளை சூழ்ந்து ஏடாகூட-மாக பேச ஆரம்பிக்க, நாகுவுக்கு பயத்தில் உடம்பே உதற ஆரம்பித்து விட்டது. யார் இந்த ஆட்கள், ஏன் என்னிடம் வந்து இப்படி அசிங்கமாக பேசுகிறார்கள், கோயில் என்றால் தெய்வ வழிபாடு செய்யும் திருத்தலம் என்று தானே நினைத்து வந்தேன், இங்கே தாசிகள் ஒரு தனி சாம்ராஜியமே நடத்துகிறார்கள் போல இருக்கே. சே சே, கோயில்ல எல்லாம் இந்த கூத்து தான் நடக்குதா, இது தெரியாம நான் வேற வந்து இந்த காலி பசங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே, என்று அஞ்சி நடுநடுங்-கினாலும், எப்படியோ சமாளித்துக்கொண்டு தப்பித்து, வீடு வந்து சேர்ந்தாள். அப்புறம் தான் தெரிந்தது, இதெல்லாம் ராமசாமியின் லீலை என்று. கோயில் குலம்னு சுத்தாதேனு சொன்னா கேட்டியா, இப்ப தெரியுதா கோயில்களோட யோக்கியதை? என்று ராமன் கேட்ட போது, சரி தான் இனி கோயிலுக்கு போகலை என்ற முடிவுற்கு வந்தாள்.

தேமொழி

unread,
Aug 14, 2014, 6:57:49 PM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

...இழை தலைப்பை மறுபடி படிக்கவும்




..... தேமொழி

செல்வன்

unread,
Aug 14, 2014, 7:04:39 PM8/14/14
to vallamai, mintamil
சிறந்த மனிதநேயர் என நீங்கள் எழுதியதால் உங்கள் ஸ்டேட்மெண்ட் சரியா, இல்லையா என விவாதிக்க வேண்டாமா?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Aug 14, 2014, 9:31:36 PM8/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.////


FYI....நீங்கள் குறிப்பிடுவது செய்தியின் ஒரு பகுதி.  

ஆனால் கவனிக்கப்பட வேண்டியது.....செய்தியின் மற்றொரு பகுதி....அப்பகுதிதான் இழையின் விவாதத்திற்குத்  தொடர்பானது...

மீண்டும்  மீண்டும் இழையை தொடர்ந்து நீங்கள் வேறு கோணத்திற்கு திசை திருப்பிவிட முயல்வதேன் ??!!??....

if you wish ... no problem..... i shall repeat  it....

இது கண்ணில் படவில்லையா?  

அடுத்தவர்கள் மனம் புண்படுமாறு தனது செய்கை அமைந்துவிடுமோ என ஒதுங்கிக் கொள்வது பெருந்தன்மை உடையவர் செயல்.


..... தேமொழி









To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 14, 2014, 9:41:27 PM8/14/14
to mint...@googlegroups.com, vallamai


2014-08-14 22:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

 
அதே பண்பாட்டை பின்பற்றி சிவாசாரியார்களின் மதநம்பிக்கையை மதித்து போற்றுவோம். அவர்கள் விரும்பாத ஒரு செயலை செய்ய அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்பதை பெரியாரின் உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.


 
சிவாச்சார்யார்கள் அவர்கள் விரும்பும்படி சொன்னால் அழகாக தமிழில் பேரூரிலும், மதுரையிலும், ஹூஸ்டனிலும்
அர்ச்சனை செய்கிறார்கள் பல காலமாக. அதனால் தான் சொன்னேன்:
சிவனை அவர்கள் முன்னோர்கள் வணக்கியதுபோல் வணங்க, மரியாதை கொடுக்கத்தான் காந்தளகம் ஐயா எழுதியிருக்கிறார்.
சிவாச்சார்யர்களுக்கு பிடிக்காதது சிவன் அல்லவே.

மதுரை மீனாட்சி நாளும் கேட்கும் அருச்சனை இது:

ஆனால், மந்திரங்களை எப்படி தமிழில் சொல்வது? ஆகமங்கள் வழியில் செய்ய சைவ ஆதீனங்கள் சுப்ரீம் கோர்ட்டிலும்
வடமொழிக்கு இருக்கும் இடத்தை உறுதி பலகாலமாகச் செய்கின்றனர்.

சைவம், வைஷ்ணவம் - இரண்டிலும் செம்மொழிகள் தமிழ், வடமொழி தோத்திரமாகவும், மந்திரமாகவும் இருக்கும்.
மசூதியில் அல்லாவுக்கு ஓதப்படுவது அறபி பாஷையில் தானே இருக்கிறது. பல ஒலிபெருக்கிகளில் தமிழகம்
எங்கும் தமிழிலா ஓதுகிறார்கள்? - என்பது சிந்திக்கலாம்.

நா. கணேசன்  



ௐ மதுரை மீனாட்சியே போற்றி! தமிழர்ச்சனை




1. ௐ அங்கயற்கண் அம்மையே போற்றி 
2. ௐ அகிலாண்ட நாயகியே போற்றி 
3. ௐ அருமறையின் வரம்பே போற்றி 
4. ௐ அறம்வளர்க்கும் அம்மையே போற்றி 
5. ௐ அரசிளங் குமரியே போற்றி 
6. ௐ அப்பர் பிணிமருந்தே போற்றி 
7. ௐ அமுத நாயகியே போற்றி 
8. ௐ அருந்தவ நாயகியே போற்றி 
9. ௐ அருள்நிறை அம்மையே போற்றி 
10. ௐ ஆலவாய் அரசியே போற்றி 
11. ௐ ஆறுமுகன் அன்னையே போற்றி 
12. ௐ ஆதியின் பாதியே போற்றி 
13. ௐ ஆலால சுந்தரியே போற்றி 
14. ௐ ஆனந்த வல்லியே போற்றி 
15. ௐ இளவஞ்சிக் கொடியே போற்றி 
16. ௐ இமயத்தரசியே போற்றி 
17. ௐ இடபத்தோன் துணையே போற்றி 
18. ௐ ஈஸ்வரியே போற்றி 
19. ௐ உயிர் ஓவியமே போற்றி 
20. ௐ உலகம்மையே போற்றி 
21. ௐ ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 
22. ௐ எண்திசையும் வென்றோய் போற்றி 
23. ௐ ஏகன் துணையே போற்றி 
24. ௐ ஐங்கரன் அன்னையே போற்றி 
25. ௐ ஐயம் தீர்ப்பாய் போற்றி 
26. ௐ ஒப்பிலா அமுதே போற்றி 
27. ௐ ஓங்கார சுந்தரியே போற்றி 
28. ௐ கற்றோர்க்கு இனியோய் போற்றி 
29. ௐ கல்லார்க்கும் எளியோய் போற்றி 
30. ௐ கடம்பவன சுந்தரியே போற்றி 
31. ௐ கல்யாண சுந்தரியே போற்றி 
32. ௐ கனகமணிக் குன்றே போற்றி 
33. ௐ கற்பின் அரசியே போற்றி 
34. ௐ கருணை ஊற்றே போற்றி 
35. ௐ கல்விக்கு வித்தே போற்றி 
36. ௐ கனகாம்பிகையே போற்றி 
37. ௐ கதிரொளிச் சுடரே போற்றி 
38. ௐ கற்பனை கடந்த கற்பகமே போற்றி 
39. ௐ காட்சிக்கு இனியோய் போற்றி 
40. ௐ காலம் வென்ற கற்பகமே போற்றி 
41. ௐ கிளியேந்திய கரத்தோய் போற்றி 
42. ௐ குலச்சிறை காத்தோய் போற்றி 
43. ௐ குற்றம் பொறுக்கும் குணமே போற்றி 
44. ௐ கூடல் கலாப மயிலே போற்றி 
45. ௐ கோலப் பசுங்கிளியே போற்றி 
46. ௐ சம்பந்தன் ஞானத்தாயே போற்றி 
47. ௐ சக்தி வடிவே போற்றி 
48. ௐ சங்கம் வளர்த்தாய் போற்றி 
49. ௐ சிவகாம சுந்தரியே போற்றி 
50. ௐ சித்தம் தெளிவிப்பாய் போற்றி 
51. ௐ சிவயோக நாயகியே போற்றி 
52. ௐ சிவானந்த வல்லியே போற்றி 
53. ௐ சிங்கார வல்லியே போற்றி 
54. ௐ செந்தமிழ்த் தாயே போற்றி 
55. ௐ செல்வத்துக் கரசியே போற்றி 
56. ௐ சேனைத்தலைவியே போற்றி 
57. ௐ சொக்கர் நாயகியே போற்றி 
58. ௐ சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி 
59. ௐ ஞானாம்பிகையே போற்றி 
60. ௐ ஞானப்பூங்கோதையே போற்றி 
61. ௐ தமிழர் குலச்சுடரே போற்றி 
62. ௐ தண்டமிழ்த் தாயே போற்றி 
63. ௐ திருவுடை யம்மையே போற்றி 
64. ௐ திசையெல்லாம் புரந்தாய் போற்றி 
65. ௐ திரிபுர சுந்தரியே போற்றி 
66. ௐ திருநிலை நாயகியே போற்றி 
67. ௐ தீந்தமிழ்ச் சுவையே போற்றி 
68. ௐ தெவிட்டாத தெள்ளமுதே போற்றி 
69. ௐ தென்னவன் செல்வியே போற்றி 
70. ௐ தேன்மொழியம்மையே போற்றி 
71. ௐ தையல் நாயகியே போற்றி 
72. ௐ நற்கனியின் சுவையே போற்றி 
73. ௐ நற்றவத்தின் கொழுந்தே போற்றி 
74. ௐ நல்ல நாயகியே போற்றி 
75. ௐ நீலாம் பிகையே போற்றி 
76. ௐ நீதிக்கரசியே போற்றி 
77. ௐ பக்தர்தம் திலகமே போற்றி 
78. ௐ பழமறையின் குருந்தே போற்றி 
79. ௐ பரமானந்தப் பெருக்கே போற்றி 
80. ௐ பண்ணமைந்த சொல்லே போற்றி 
81. ௐ பவளவாய்க் கிளியே போற்றி 
82. ௐ பல்லுயிரின் தாயே போற்றி 
83. ௐ பசுபதி நாயகியே போற்றி 
84. ௐ பாகம்பிரியா அம்மையே போற்றி 
85. ௐ பாண்டியர் தேவியே போற்றி 
86. ௐ பார்வதி அம்மையே போற்றி 
87. ௐ பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி 
88. ௐ பெரிய நாயகியே போற்றி 
89. ௐ பொன் மயிலம்மையே போற்றி 
90. ௐ பொற்கொடி அன்னையே போற்றி 
91. ௐ மலையத்துவசன் மகளே போற்றி 
92. ௐ மங்கல நாயகியே போற்றி 
93. ௐ மழலைக் கிளியே போற்றி 
94. ௐ மனோன்மணித் தாயே போற்றி 
95. ௐ மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி 
96. ௐ மாயோன் தங்கையே போற்றி 
97. ௐ மாணிக்க வல்லியே போற்றி 
98. ௐ மீனவர்கோன் மகளே போற்றி 
99. ௐ மீனாட்சியம்மையே போற்றி 
100. ௐ முழுஞானப் பெருக்கே போற்றி 
101. ௐ முக்கண்சுடர் விருந்தே போற்றி 
102. ௐ யாழ்மொழியம்மையே போற்றி 
103. ௐ வடிவழகம்மையே போற்றி 
104. ௐ வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி 
105. ௐ வேத நாயகியே போற்றி 
106. ௐ வையகம் வாழ்விப்போய் போற்றி 
107. ௐ அம்மையே அம்பிகையே போற்றி 
108. ௐ அகிலம் ஆளவந்தாய் போற்றி! போற்றி!!

செல்வன்

unread,
Aug 15, 2014, 12:30:44 AM8/15/14
to vallamai, mintamil

2014-08-14 20:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.////

கடவுளே இல்லை, அது வெறும் கல் என நினைப்பவர் கோயிலுக்கு போனால் அங்கே கல்லை தான் பார்ப்பார். எல்லாரும் எழுந்து நிற்கையில் அவரும் எழுந்து நின்றால் அவருக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது? சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.

சி.என். அண்ணாதுரை காஞ்சிச்புரம் கோயில் பிரசாதத்தை விரும்பி சாப்பிடுவார். "ஏன் சாப்பிடுகிறிரிகள்" என கேட்டதற்கு "சுவைக்காக, பிரசாதமாக கருதி அல்ல" என்றார். கருணாநிதி முதலான நாத்திகர்கள் ரம்ஜான் அன்று குல்லா அணிந்து நோன்புகஞ்சி குடிப்பார்கள். ஆக மதமே இல்லாதவர்களுக்கு, மத நம்பிக்கை எப்படி பாதிக்கபடும்?

ஆனால் சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள் எப்படி வேறு வழிபாடுகளில் கலந்து கொள்லவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியும்? "மறந்தும் புறம்தொழா மாந்தரை" "மரியாதைக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் புறந்தொழுதுகொள்" என சொல்லமுடியுமா? வெஜிட்டேரியனை "இன்று ஒரு நாள் மரியாதைக்கு சிக்கன் சாப்பிடு. நாளைலேர்ந்து வெஜிட்டேரியனா இரு" என சொல்ல முடியுமா?

தேமொழி

unread,
Aug 15, 2014, 2:17:38 AM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.///

ஐயோ ..பாவம்....:((

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா? 
அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம். 


///சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள்///

இப்படி எல்லோரும் நீங்களாக ஆளாளுக்கு  கடவுளுக்கென்று  job description எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.  

இந்த மாதிரி குரூர குணம் உள்ளவர் கடவுள் என விளக்குவதை தவிர்த்து விடுங்கள்...இப்படியெல்லாம் தண்டிப்பவர் கடவுளாக இருப்பாரா என்று யாருமே யோசிப்பதில்லையா? ஏன் கடவள் பெயரைக்  கெடுக்கிறீர்கள்?

மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார்  நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?
இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை. 


.... தேமொழி 

செல்வன்

unread,
Aug 15, 2014, 2:42:37 AM8/15/14
to vallamai, mintamil

2014-08-15 1:17 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐயோ ..பாவம்....:((

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா? 
அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம். 

சிவன் என்ன சொன்னார் என்பது பிரச்சனை இல்லை.

அவர் என்ன சொன்னதாக மக்கள் நம்புகிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

சிவனடியார் மறந்தும் புறம்தொழா மாந்தர்.

அவர்களை இன்று மொழியை கும்பிட சொல்வீர்கள். நாளை ஏசுவை கும்பிடு, சிவன் என்ன கொன்றா போடுவார் என கேட்பீர்கள். அடுத்து மெக்கா, மதினா யாத்திரை போனால் சிவன் கொல்வாரா என கேட்பீர்கள்..இப்படியே போயி அவர்கள் மதம் அவர்களை விட்டு அகன்றுவிடும். அவர்களுக்கு எதுக்கு எந்த வம்பு எல்லாம்? அவர்கள் நம்பிக்கையை அவர்களை பின்பற்ற விடுவோம்.

தேமொழி

unread,
Aug 15, 2014, 3:58:14 AM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
/// அவர்கள் நம்பிக்கையை அவர்களை பின்பற்ற விடுவோம்.///


அடுத்தவர் உரிமையை மதிக்கும் லிபெரல்கள் சொல்வதையெல்லாம் நீங்கள் சொல்வது கொஞ்சம் வியப்பே செல்வன்.  தனக்கு வேண்டும் பொழுது உரிமையின் அவசியம் நன்கு புரிகிறதல்லவா?
:)) தனக்கொரு நியாயம், பிறர்க்கொரு நியாயம் என இருக்கும் கன்செர்வேடிவ்களின் முகத்திரையும் கிழிந்தது. 

அத்துடன் ஆத்திகர்களைவிட நீங்கள் எப்பொழுதும் கரித்துக் கொட்டும்  நாத்திகர்களுக்கு பரந்த மனப்பான்மையையும், மக்களை மதிக்கும் பண்பாடும் இருப்பதையும், பொதுஇடத்தில் அவர்கள் எப்படி நாகரிகத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுக் காட்ட நல்ல வாய்ப்பும் அமைந்தது.

பெருமைக்கும்  சிறுமைக்கும்  உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்  .... நான் சொல்லவில்லை குறள் சொல்கிறது. 

இவர்கள் எழுந்து நிற்காததால் சிறுமை அடைந்தது தமிழா இவர்களா?

ஒருவரது பரந்தமனப்பான்மை தினசரியில் செய்தியாக  வருகிறது, மற்றவரின் செயல் கண்டிக்கப்படுகிறது. 

you be the judge

..... தேமொழி

செல்வன்

unread,
Aug 15, 2014, 4:27:20 AM8/15/14
to vallamai, mintamil
ரிலிஜியஸ் எக்ஸெம்ப்ஷன் குறித்து பத்தி, பத்தியாக எழுதினேன்.

இதில் நாத்திகர் என எந்த தரப்பும் காணோம். இருதரப்பும் தமிழர்கள். அதில் சிலர் சிவாசாரியார்கள். அவர்கள் நம்பிக்கையை மதித்து ரிலிஜியஸ் எக்ஸெப்ம்ஷன் கொடுப்பது தமிழுக்கு பெருமை, அதுவே பரந்த மனபான்மை.

நாத்திகர்கள் பெருமாள் கோயில் சுண்டலுக்கு கொள்கையை விட்டுவிட்டு கியூவில் நிற்பதை பரந்தமனபான்மை என நீங்கள் சொல்லிகொள்லலாம். கொள்கை பிடிப்பு இல்லாமல் இருப்பதுதான் பரந்தமனபான்மையா? :-)

தேமொழி

unread,
Aug 15, 2014, 4:45:00 AM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நான் ஒருவர் பொதுவிழாவில் எழுந்து நின்று மக்களுக்கு மரியாதை கொடுத்ததையும், 
பொது இடத்தில் பிறருக்கு தனது செய்கை ஏதாவது வருத்தம் அளித்துவிடுமோ என அவ்விழாவைத் தவிர்தததையும்
நண்பர்களை அவமதிக்கக் கூடாது என்று அவர்கள் செய்கையை மறுக்காததையும் பரந்த மனப்பான்மை என்று காட்டினேன்..

இப்பதிவுகளில் மக்களை மதிக்கும் கொள்கையை/பெருந்தன்மையைக் குறிப்பிட்டேன்.  தெரியாத கடவுளைவிட தெரிந்த மக்களை மதிப்பது என்பதுதான் அந்தக் கொள்கைப்பிடிப்பு. 
(நான் பெரியார் பதிவை இட்ட மறு பதிவே இந்த கோணத்தை பாராட்டி வந்தது, இதிலிருந்து பிறருக்கு பதிவின் நோக்கம் புரிந்தது என்பது எனக்கும் தெரிகிறது)

இதில்  நீங்கள் குறிப்பிடும் சுண்டல்  எங்கிருந்து வந்தது?
உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன்.

..... தேமொழி

amachu

unread,
Aug 15, 2014, 9:21:50 AM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
///சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.///

ஐயோ ..பாவம்....:((

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா? 
அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம். 


ஒருவருக்கு தாய் தந்தையர் பிள்ளை குட்டிகள் இருப்பது போல் இன்னொருத்தனுக்கும் தாய் தந்தையர் பிள்ளை குட்டிக்கள் இருக்கும் போது அவரவரை அவரவர் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டுவிட்டால் தொண்டின் தேவை எங்கே?


 


///சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள்///

இப்படி எல்லோரும் நீங்களாக ஆளாளுக்கு  கடவுளுக்கென்று  job description எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.  

இந்த மாதிரி குரூர குணம் உள்ளவர் கடவுள் என விளக்குவதை தவிர்த்து விடுங்கள்...இப்படியெல்லாம் தண்டிப்பவர் கடவுளாக இருப்பாரா என்று யாருமே யோசிப்பதில்லையா? ஏன் கடவள் பெயரைக்  கெடுக்கிறீர்கள்?


கடவுள்ங்கறது இங்கே அவரவர் இஷ்டம் தான். சிலருக்கு குழந்தை - சிலருக்கு காதலன் - சிலருக்கு கடவுளே - சிலருக்கு நண்பன்.

 
--

ஆமாச்சு

amachu

unread,
Aug 15, 2014, 9:27:02 AM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார்  நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?
இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை. 


தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?

எங்கே ஆதாரம்? ஆதாரமில்லா தாய்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

மதவாதிகளை விட இந்த டுமீல் வாதிகள் கடிதான் தாங்க முடியல.

--

ஆமாச்சு


N. Ganesan

unread,
Aug 15, 2014, 11:00:27 AM8/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, August 15, 2014 6:27:02 AM UTC-7, ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் wrote:


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார்  நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?
இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை. 


தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?

ஆதி சிவன் பெற்று விட்டான் என்ற பரமானந்தக் கவிதைக்கு ஆதாரம் இல்லையா?

N. Ganesan

unread,
Aug 15, 2014, 11:04:13 AM8/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, August 15, 2014 6:21:50 AM UTC-7, ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் wrote:


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
///சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.///

ஐயோ ..பாவம்....:((

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா? 
அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம். 


ஒருவருக்கு தாய் தந்தையர் பிள்ளை குட்டிகள் இருப்பது போல் இன்னொருத்தனுக்கும் தாய் தந்தையர் பிள்ளை குட்டிக்கள் இருக்கும் போது அவரவரை அவரவர் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டுவிட்டால் தொண்டின் தேவை எங்கே?


எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டால் சிவாச்சார்யர்கள் சிவனைப் பார்த்துப்பாங்க என்றீர்கள்.
என்ன தான் இருந்தாலும் ஐ.டி சம்பளம் வராது-னு பல சிவாச்சார்யர் வீட்டுப் பசங்க ஐ.டி. தொழிலுக்குப்
போறாங்க.

சிவன். விஷ்ணு, கடவுள் என்ற ஹிண்டுயிஸம் பிஸினெஸ் தழைத்தோங்க பலரும் வடமொழி கற்று
ஆகமங்கள் சொல்ல, அர்ச்சனை பண்ண தயாரா இருக்காங்க. விட்டால் நடக்கும். பாஜக வழி அதுவே.

நா. கணேசன் 

 


///சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள்///

இப்படி எல்லோரும் நீங்களாக ஆளாளுக்கு  கடவுளுக்கென்று  job description எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.  

இந்த மாதிரி குரூர குணம் உள்ளவர் கடவுள் என விளக்குவதை தவிர்த்து விடுங்கள்...இப்படியெல்லாம் தண்டிப்பவர் கடவுளாக இருப்பாரா என்று யாருமே யோசிப்பதில்லையா? ஏன் கடவள் பெயரைக்  கெடுக்கிறீர்கள்?

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 15, 2014, 12:21:13 PM8/15/14
to vallamai, Geetha Sambasivam, K Selvan, Subashini Tremmel, Anna Kannan, N. Kannan, Pavai Mathi, Jothi Themozhi, mintamil
2014-08-15 18:57 GMT+05:30 amachu <aama...@gmail.com>:


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார்  நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?
இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை. 


தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?

எங்கே ஆதாரம்? ஆதாரமில்லா தாய்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?


மேற்கண்ட சொற்கள் புண்படுத்துகின்றன திரு ஆமாச்சு. 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

N. Ganesan

unread,
Aug 15, 2014, 12:25:42 PM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, geetha...@gmail.com, hol...@gmail.com, ksuba...@gmail.com, annak...@gmail.com, navan...@gmail.com, pavai...@yahoo.com, them...@yahoo.com

will amachu say similar words to Bharatmata who was created even later than Tamil Thaay?

N. Ganesan
 

செல்வன்

unread,
Aug 15, 2014, 12:44:51 PM8/15/14
to mintamil, vallamai
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து பெரியார் கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து?

தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3,000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் “அ” வருமா என்று கேட்கிறேன்?

திராவிட இயக்கம் தோன்றுகிற வரை தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது?

அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால் உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்திரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

இங்கு எதிரிலிருக்கிற மாணவர்களில் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் மாணவர்களைச் சாம்பலடித்துக் கொள்ளச் சொல்ல மாட்டார்கள்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை- அன்பை- அறிவைக் கற்றுக் கொடுக்க வேண் டும். நம் நாடு முன்னேற்றமடையாததற்குக் காரணம் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆளில்லாததே ஆகும்.

இங்குள்ள ஆசிரியர்கள் மடமையை முட்டாள்தனத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எதற்காக மாணவர்கள் அரசியல் கட்சியில் ஈடுபட வேண்டும்?

மேல் நாடுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு மிகவும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஏதாவது சிறு தவறு செய்தால் அதனை ஆசிரியர்களிடம் தான் போய்ச் சொல்வார்கள். இங்கு மாணவரை ஆசிரியர் கண்டித்தால் உடனே மாணவனின் பெற்றோர் ஆசிரியரைக் கண்டிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.
நீங்கள் கல்வியை வளரச் செய்த இந்த அரசாங்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும், நீங்கள் எல்லாம் படிக்கிற இப்பள்ளி நிறுவனருக்கு, நிருவாகிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அறிவோடு செய்ய வேண்டியதாகும்.

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்று கூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை- முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்-கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்பவர்கள் நாம் தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்நதெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பது தான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்த காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையன அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை.

செல்வன்

unread,
Aug 15, 2014, 12:53:38 PM8/15/14
to mintamil, vallamai
நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து.ஒரு முட்டாள்தனத்திற்கு பதில் இன்னொரு முட்டாள்தனம்”

பெரியார்- விடுதலை , 01-ஜூன்-1954:


amachu

unread,
Aug 15, 2014, 1:11:21 PM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, geetha...@gmail.com, hol...@gmail.com, ksuba...@gmail.com, annak...@gmail.com, navan...@gmail.com, pavai...@yahoo.com, them...@yahoo.com
தனிப்பட்டு கேட்டீங்கன்னா, தமிழ்நாட்டில் தமிழ்த் தாய் தான் பாரதமாதா. :)

மேலும், பாரதமாதாவை போற்றிக் கொண்டு யாரும் ஈசனைப் பற்றிய நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்கலையே?

அதென்ன தமிழ்தாய் பாரதத்தாய்? பெண்ணாதிக்கம்.

தந்தை மொழி சொல்லலாமே! தமிழ்த் தந்தை ஈசன் :)

--

ஆமாச்சு

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Aug 15, 2014, 1:40:25 PM8/15/14
to vall...@googlegroups.com, geetha...@gmail.com, hol...@gmail.com, ksuba...@gmail.com, annak...@gmail.com, navan...@gmail.com, pavai...@yahoo.com, them...@yahoo.com, mint...@googlegroups.com
சில நேரங்களில் நட்ட கல்லும் பேசுமோன்னு பாடத் தானங்களே வேணும். வேற வழியில்லை. மன்னிக்கணும்.

--

ஆமாச்சு

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Aug 15, 2014, 1:46:48 PM8/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, August 15, 2014 8:34:13 PM UTC+5:30, N. Ganesan wrote:


எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டால் சிவாச்சார்யர்கள் சிவனைப் பார்த்துப்பாங்க என்றீர்கள்.
என்ன தான் இருந்தாலும் ஐ.டி சம்பளம் வராது-னு பல சிவாச்சார்யர் வீட்டுப் பசங்க ஐ.டி. தொழிலுக்குப்
போறாங்க.

சிவன். விஷ்ணு, கடவுள் என்ற ஹிண்டுயிஸம் பிஸினெஸ் தழைத்தோங்க பலரும் வடமொழி கற்று
ஆகமங்கள் சொல்ல, அர்ச்சனை பண்ண தயாரா இருக்காங்க. விட்டால் நடக்கும். பாஜக வழி அதுவே.


மற்ற பிராமணர்களுக்கு தாங்கள் சிவாச்சாரியார் பட்டாச்சாரியார் வேலை பார்ப்பவர்கள் அல்ல என்ற தெளிவு உண்டு.

அதனால் தாங்கள் மோஷமடையாது போகமாட்டோம் என்பதும் உறுதி. அதனால் அவர்களுக்கு அது தேவையும் இல்லை.

மற்ற பார்ப்பளர்கள் திரிமேனி தீண்டாதோர் என்பதி பெரிய கண்டுபிடிப்பே கிடையாது. அதை மற்றோர் தான் புரிஞ்சக்கணும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் போன்ற சில விதிவிலக்குகள் உண்டு. அங்கே ஆகம முறையில்லை.

எங்க ஊரைச் சுற்றியே நிறைய கோவில்கள் ஒரு கால வழிபாட்டுக்கு கூட வழியில்லாம அறநிலையத்துறை கிட்ட இருக்கு.

வேகன்சி இருக்கற இடத்துல ஆள் நிரப்ப ஆவண செய்து ஆள் இருக்கும் இடத்தில் இருப்போரை நல்லபடியா பார்த்துக்க ஆவண செய்தாலே போதும்.

--

ஆமாச்சு



amachu

unread,
Aug 15, 2014, 1:50:54 PM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, August 15, 2014 8:30:30 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Friday, August 15, 2014 6:27:02 AM UTC-7, ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் wrote:


On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:
மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார்  நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?
இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை. 


தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?

ஆதி சிவன் பெற்று விட்டான் என்ற பரமானந்தக் கவிதைக்கு ஆதாரம் இல்லையா?

கவிதையென்ன லீகல் கான்டிராக்டா? தேவையான மனவெழுச்சி அந்த பாடல் எழுப்புகிறது. அதன் நோக்கம் பூர்த்தி.

--

ஆமாச்சு

amachu

unread,
Aug 15, 2014, 2:01:08 PM8/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, August 15, 2014 11:16:52 PM UTC+5:30, amachu wrote:
மற்ற பார்ப்பளர்கள் திரிமேனி தீண்டாதோர் என்பதி பெரிய கண்டுபிடிப்பே கிடையாது. அதை மற்றோர் தான் புரிஞ்சக்கணும்.


மற்ற பார்ப்பனர்கள் திருமேனி தீண்டாதோர் என்பது பெரிய கண்டுபிடிப்பே கிடையாது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 15, 2014, 2:04:33 PM8/15/14
to vallamai, mintamil
இன்று வல்லமை, மிந்தமிழ் குழுமங்களில் நம்மிடையே எழுதுகிற நண்பரின் சொற்கள் புண்படுத்துவனவாக இருக்கிறதென்பதை எழுதினால் என்றோ பெரியார் எழுதியதை முயன்று தேடி எடுத்து இட்டுள்ளீர்கள் அன்பிற்கினிய செல்வன்.

பெரியாருடைய சொற்கள் தமிழகத்தில் பலரை ஒரு காலத்தில் வருந்தச்செய்து அதற்கு எதிர்வினைகள், கசப்பு இன்று வரை இருக்கிறதென்பது என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் இன்றிருப்பவர் சொல்லவும் இயலாது.

ஆனால் இன்று எழுதுகிற நம் நண்பர்களிடம் நம் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். கசப்பு வளர்க்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


தேமொழி

unread,
Aug 15, 2014, 2:07:12 PM8/15/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, August 15, 2014 9:53:39 AM UTC-7, செல்வன் wrote:
நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து.ஒரு முட்டாள்தனத்திற்கு பதில் இன்னொரு முட்டாள்தனம்”

பெரியார்- விடுதலை , 01-ஜூன்-1954:



ஆகா அருமை..அருமை.. உதவிக்கு நன்றி செல்வன்.. 
இப்படி தனது சொந்த வாழ்வில் ஆணித்தரமான கொள்கைகள்  வைத்திருந்தவரே பொது விழாவில் எப்படி மக்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. இது போலவே முட்டாள்தனம் என்று அவர் எதிர்த்த   கருத்துக்களையும் ஒரு பக்கம் வைத்து  விட்டு நண்பர்கள் என்றதும் அவர்களை அவமதிப்பது கூடாது என்ரு என்ன ஒரு பண்பாட்டோடு இருந்திருக்கிறார் பாருங்கள்.

அதனால்தான் அவருக்கு  துன்புறுத்தப்பட்ட  மக்களுக்காக அவர்கள் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உரிமைக்காகப் போராடும் எண்ணம் எழுந்திருக்கிறது.

ஆனால் இந்த தன்னலம் கருதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால்தான் ஆதிகாலத்தில் இருந்து சச்சரவுகள்.

இறுதியாக நான் சொல்ல வந்தது ஒரு வழியாக உங்களுக்குப் புரிந்துவிட்டது.

அவருடைய பெருந்தன்மையை பிறரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.  

ஆமாம் ஏன் சேம் சைட் கோல் போடறீங்க???!!!!????


..... தேமொழி







செல்வன்

unread,
Aug 15, 2014, 8:41:09 PM8/15/14
to vallamai, mintamil

2014-08-15 13:04 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
இன்று வல்லமை, மிந்தமிழ் குழுமங்களில் நம்மிடையே எழுதுகிற நண்பரின் சொற்கள் புண்படுத்துவனவாக இருக்கிறதென்பதை எழுதினால் என்றோ பெரியார் எழுதியதை முயன்று தேடி எடுத்து இட்டுள்ளீர்கள் அன்பிற்கினிய செல்வன்.

பெரியாருடைய சொற்கள் தமிழகத்தில் பலரை ஒரு காலத்தில் வருந்தச்செய்து அதற்கு எதிர்வினைகள், கசப்பு இன்று வரை இருக்கிறதென்பது என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் இன்றிருப்பவர் சொல்லவும் இயலாது.

ஆனால் இன்று எழுதுகிற நம் நண்பர்களிடம் நம் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். கசப்பு வளர்க்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.
நன்றி.


வினைதீர்த்தான் ஐயா.

நன்றி. கசப்பு வளரகூடாது எனும் நோக்கில் இடப்பட்டதுதான் பெரியாரின் உரை.


--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

செல்வன்

unread,
Aug 15, 2014, 8:53:52 PM8/15/14
to vallamai, mintamil

2014-08-15 13:07 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆகா அருமை..அருமை.. உதவிக்கு நன்றி செல்வன்.. 
இப்படி தனது சொந்த வாழ்வில் ஆணித்தரமான கொள்கைகள்  வைத்திருந்தவரே பொது விழாவில் எப்படி மக்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. இது போலவே முட்டாள்தனம் என்று அவர் எதிர்த்த   கருத்துக்களையும் ஒரு பக்கம் வைத்து  விட்டு நண்பர்கள் என்றதும் அவர்களை அவமதிப்பது கூடாது என்ரு என்ன ஒரு பண்பாட்டோடு இருந்திருக்கிறார் பாருங்கள்.

அதனால்தான் அவருக்கு  துன்புறுத்தப்பட்ட  மக்களுக்காக அவர்கள் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உரிமைக்காகப் போராடும் எண்ணம் எழுந்திருக்கிறது.

ஆனால் இந்த தன்னலம் கருதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால்தான் ஆதிகாலத்தில் இருந்து சச்சரவுகள்.

இறுதியாக நான் சொல்ல வந்தது ஒரு வழியாக உங்களுக்குப் புரிந்துவிட்டது.

அவருடைய பெருந்தன்மையை பிறரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.  

ஆமாம் ஏன் சேம் சைட் கோல் போடறீங்க???!!!!????


பெரியார் பண்பாட்டுடன் வாழ்ந்தவர் தான் தேமொழி.

பண்பாடு என வருகையில் ஒருவர் பண்பாட்டை இன்னொருவர் மேல் திணிக்க முடியாது.

உணவு, உடை, வழிபாடு என பகுதிக்கு பகுதி தமிழ்நாட்டிலேயே கலாசாரம் மாறுபடும். ஆக "எழுந்து நிற்பது பண்பாடு" என நீங்கள் கூறுகையில் அப்பாண்பாட்டை பின்பற்றாத பிரிவின் மேல் அப்பண்பாட்டை திணிக்க இயலாது எனும் பொருளும் சேர்ந்தே வருகிறது.

என்னளவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு என்றும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவேன். கடவுள் குறித்து பெரியார் சொன்னதை எப்படி ஏற்கவில்லையோ, அதேபோல் தமிழ் குறித்து அவர் கூறியதையும் நான் ஏற்கவில்லை. ஆனால் தம் சைவநெறிக்கு முரணாக அச்செயல் இருப்பதாக கருதும் சிவாசாரியார்கள் மேல் அதை திணிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

பெருந்தன்மை என்பது "நார்மலாக தனக்கு சேரவேண்டிய ஒரு விஷயத்தை விட்டுகொடுத்தலே ஆகும்". எனக்கு ஒருவன் 10 ரூபாய் பணம் தரணும்..சரி பெருந்தன்மையாக விட்டுகொடுத்துவிட்டேன் என சொல்லுவது பெருந்தன்மை. விட்டுகொடுக்காமல் வசூல் செய்வது நார்மலான நடைமுறை.

எல்லா மனிதர்களும் எல்லா சமயமும், எல்லா விஷயத்திலும், எல்லாரிடமும் பெருந்தன்மை காட்டமாட்டார்கள். இடம், பொருள், ஏவல் பொறுத்தே பெருந்தன்மை காட்டுவார்கள். சிகண்டி மேல் அம்பு விடாமல் உயிரை விட்டது பீஷ்மரின் பெருந்தன்மை. அதே என்னை ரோட்டில் வழிப்பறி செய்யும் நோக்கில் ஒரு பெண்/அரவாணி தாக்கினால் நான் பீஷ்மர் போல் பெருந்தன்மையாக எதிர்தாக்குதல் நடத்தாமல் உயிரை விட மாட்டேன். பெருந்தன்மை என்பது எதை விட்டுகொடுக்கிறோம், எங்கே விட்டுகொடுக்கிறோம், யாருக்கு விட்டுகொடுக்கிறோம் என்பதை பொறுத்தது. சைவநெறி என் உயிர் என கருதும் ஆசார்யார்கள் அதை விட்டுகொடுக்க முன்வராததில் எக்குற்றமும் இல்லை. அது பெருந்தன்மை இல்லை என கருதுவது உங்கள் உரிமை. ஆனால் வாழ்வில் யாரும் எல்லா சமயமும், எல்லா இடத்திலும், எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையானவர்களாக இருக்கமுடியாது. இருந்தால் உலகம் தலையில் மிளகாய் அரைத்துவிடும். கர்ணனும், பாரிவள்ளலும் இன்று இருந்தால் ஒரே நாளில் ஒட்டான்டியாக்கிவிடுவார்கள்..உலகம் அந்நிலையில் தான் உள்ளது

--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

வேந்தன் அரசு

unread,
Aug 15, 2014, 10:16:44 PM8/15/14
to vallamai, மின்தமிழ்



14 ஆகஸ்ட், 2014 1:03 பிற்பகல் அன்று, amachu <aama...@gmail.com> எழுதியது:


மத்தநாட்டில் நாத்திகர்கள் படும் பாட்டையும் தொன்றுதொட்டு நாத்திகரகளுக்கு இடமளித்து வரும் நாட்டிற்கு இது கூட செய்யலைன்னா எப்படி?

இதை இன்றைய நாளின் சிறந்த ஜோக்காக போற்றலாம். 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Aug 16, 2014, 1:10:19 AM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///ஆனால் வாழ்வில் யாரும் எல்லா சமயமும், எல்லா இடத்திலும், எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையானவர்களாக இருக்கமுடியாது. இருந்தால் உலகம் தலையில் மிளகாய் அரைத்துவிடும். ///


அதுதான் இங்கு முக்கியம்  செல்வன்...


கீழ் வருவது செல்வனுக்கு மட்டுமல்ல தங்களை தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்களின் சிந்தனைக்கு....

நான் கவனித்த வரை மொழி பற்றிய கருத்துப் பரிமாற்றங்களில் வழி  "தமிழர்கள்" தங்களின் இரட்டை மனநிலையைக்  காட்டும் போக்கு மிக மிகத் தெளிவானது.


சூழ்நிலை --- 1:

எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழியும் ஆங்கிலமும்  போதும் ....இந்தியும் வேண்டாம் சமஸ்கிரதமும் வேண்டாம்...
விரும்புபவர்கள் எதை வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளட்டும் ...வேண்டாம் என்பவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்றால் ....

வரும் பதில் ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே வரும் பதில் ...... தேசத்துரோகி...தேசிய நலனில் அக்கறை இல்லையே உனக்கு 


சூழ்நிலை --- 2:

தமிழ்மொழி வாழ்த்து பாடும் பொழுது தமிழராக இருந்தும் ஏன் தமிழை அவமதிக்கிறீர்கள்? தாய்மொழிப்பற்று இல்லையா ? (இங்கு நாடு முக்கியமல்ல அவர்கள் தமிழர் என்பது மட்டும்தான் கவனிக்கப்பட வேண்டியது)

வரும் பதில்... ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே ... ஏனிந்த மொழிவெறி உனக்கு? ஏன் உன் பண்பாட்டை எங்கள் மீது திணிக்கிறாய் ?  எங்களுக்கு கடவுள் பற்றே முக்கியம்.


ஆக...திணிப்பது என்பது ஒரு வழிப்பாதை...ஒருவர் திணிக்கலாம் பிறமொழியை 
அனால் தமிழர் தமிழுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என எதிர் பார்ப்பது தவறு... அவ்வாறு எதிர்பார்ப்பது கருத்துத் திணிப்பில் அடங்கும்..

தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று தேவை இல்லை 
ஆனால் தமிழருக்குத் தேவை   ... 
1. தேசியப்பற்று 
2. கடவுள் பற்று 
ஆகியவை மட்டுமே.  தமிழை  முன்னிருத்தி சிலரின் பொருந்தாத செயல்களைப் பற்றிக் கேள்வி எழுப்பினால்  கிடைப்பது மொழி வெறியர் பட்டம்.

மீண்டும் செல்வனின் பொன்மொழி இங்கு: 
வாழ்வில் யாரும் எல்லா சமயமும், எல்லா இடத்திலும், எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையானவர்களாக இருக்கமுடியாது. இருந்தால் உலகம் தலையில் மிளகாய் அரைத்துவிடும்.
 

-Your honor, I rest my case.


..... தேமொழி

amachu

unread,
Aug 16, 2014, 2:32:08 AM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, August 16, 2014 10:40:17 AM UTC+5:30, தேமொழி wrote:

சூழ்நிலை --- 2:

தமிழ்மொழி வாழ்த்து பாடும் பொழுது தமிழராக இருந்தும் ஏன் தமிழை அவமதிக்கிறீர்கள்? தாய்மொழிப்பற்று இல்லையா ? (இங்கு நாடு முக்கியமல்ல அவர்கள் தமிழர் என்பது மட்டும்தான் கவனிக்கப்பட வேண்டியது)

எந்த தமிழ் மொழிக்கு வாழ்த்து. செந்தமிழ் வட பாண்டி நாடு மட்டுந்தான். த்தவங்க மேல அந்த மொழியை ஏன் திணிக்கறீங்க?




amachu

unread,
Aug 16, 2014, 2:35:59 AM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, August 16, 2014 10:40:17 AM UTC+5:30, தேமொழி wrote:
சூழ்நிலை --- 1:

எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழியும் ஆங்கிலமும்  போதும் ....இந்தியும் வேண்டாம் சமஸ்கிரதமும் வேண்டாம்...
விரும்புபவர்கள் எதை வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளட்டும் ...வேண்டாம் என்பவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்றால் ....

வரும் பதில் ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே வரும் பதில் ...... தேசத்துரோகி...தேசிய நலனில் அக்கறை இல்லையே உனக்கு 


அப்படியெல்லாம் யாரும் சொல்லலை. நான் சொல்லல :)

மக்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்த மத்திய அரசு அதன் வரம்பிற்கு உட்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கிறது. அவ்வளவு தான்.

இது வரை அப்படி வந்து முடிவெடுத்தவங்க எழுதின வரலாற்றை படிச்சு மார்க் வாங்கிட்டு வந்துதான் அவங்களையும் போட்டு மிதிக்கிறோம்.

--

ஆமாச்சு
 

amachu

unread,
Aug 16, 2014, 2:52:46 AM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, August 16, 2014 7:46:47 AM UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:



14 ஆகஸ்ட், 2014 1:03 பிற்பகல் அன்று, amachu <aama...@gmail.com> எழுதியது:


மத்தநாட்டில் நாத்திகர்கள் படும் பாட்டையும் தொன்றுதொட்டு நாத்திகரகளுக்கு இடமளித்து வரும் நாட்டிற்கு இது கூட செய்யலைன்னா எப்படி?

இதை இன்றைய நாளின் சிறந்த ஜோக்காக போற்றலாம். 


தர்மகீர்த்தி பற்றியெல்லாம் அறிந்தால் சோக்கா இருக்கும்.

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Aug 16, 2014, 4:15:37 AM8/16/14
to vallamai, mintamil

2014-08-16 0:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழியும் ஆங்கிலமும்  போதும் ....இந்தியும் வேண்டாம் சமஸ்கிரதமும் வேண்டாம்...
விரும்புபவர்கள் எதை வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளட்டும் ...வேண்டாம் என்பவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்றால் ....

வரும் பதில் ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே வரும் பதில் ...... தேசத்துரோகி...தேசிய நலனில் அக்கறை இல்லையே உனக்கு 


இதெல்லாம் சொன்னது யார்?

எனக்கு இந்தியும் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது. அதனால் நான் இந்திய தேசபக்தியில் வேறு எந்த மாநிலத்தவர்க்கும் குறைந்துபோகவில்லை.

60களில் இப்படி விவரம் இல்லாமல் வட இந்தியர்கள் சிலர் சொல்லி இருக்கலாம். இன்று அவர்கள் பேரகுழந்தைகள் ஆங்கிலம் கற்று சாப்ட்வேரில் நுழையும் நிலை உருவாகியுள்ளது. அதனால் 50, 60களில் நிலவிய மொழிபிரச்சனை மனபான்மையை விட்டு வெளீயே வருவது வடநாட்டவர்க்கும் நல்லது, தமிழர்க்கும் நல்லது.


தேசத்தால் இந்தியர்
மொழியால் தமிழர்
மதத்தால் இந்து, முஸ்லிம், எதேனும்
ஜாதியால் எக்ஸ், ஒய், இசட்

இப்படி பல அடையாளங்களுடன் ஒரு மனிதரால் எந்த முரண்பாடும் இன்றி வாழமுடியும். தமிழனாக இருந்தால் ஜாதி அடையாலம் ஆகாது, மத அடையாளம் ஆகாது அல்லது வைஸ் வெர்சா என சொல்லுவது பொருளற்ற வாதம். தமிழனாக இருப்பது இந்தியாவை வலுப்படுத்தும், பலவீனபடுத்தாது. நல்ல இந்தியனாக இருப்பது அதே போல் தமிழையும், தமிழ்மொழியையும் பலபடுத்தவே செய்யும்.

N. Ganesan

unread,
Aug 16, 2014, 8:19:44 AM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நல்ல பதில். 

மத்ய ஸர்க்கார் இந்தியாவின் க்லாஸிகல் மொழி என்று வடமொழி கற்பிக்க சில கோடி ரூபாய்கள் செலவிடலாம். தவறில்லை.
ஆனால், அது வெறும் இந்தி எழுத்தாக இல்லாமல், எப்பொழுதும் வடமொழி எவ்வாறு கற்பிக்கப்பட்டதோ அவ்வாறு கற்பிக்கச்
செலவிடல் வேண்டும்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Aug 16, 2014, 2:42:16 PM8/16/14
to vallamai, mintamil

2014-08-16 7:19 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மத்ய ஸர்க்கார் இந்தியாவின் க்லாஸிகல் மொழி என்று வடமொழி கற்பிக்க சில கோடி ரூபாய்கள் செலவிடலாம். தவறில்லை.
ஆனால், அது வெறும் இந்தி எழுத்தாக இல்லாமல், எப்பொழுதும் வடமொழி எவ்வாறு கற்பிக்கப்பட்டதோ அவ்வாறு கற்பிக்கச்
செலவிடல் வேண்டும்.


தேவையற்ற முயற்சி.

பல்கலைகழகங்களில் மற்ற மொழிகளை போல் சமஸ்கிருதம் கற்பிக்கலாம். பள்ளிகளில் விருப்பபாடங்களில் ஒன்றாக சமஸ்கிருதம் இருக்கலாம். பழைய சமஸிருத நூல்களை, இலக்கியங்களை மொழிபெயர்க்கலாம். சம்சிருத வாரம் கூட கொண்டாடலாம். சமஸ்கிருதம், இந்தி மாதிரி மொழிகளை பிரச்சாரம் செய்ய அமைப்புகளை மத்திய அரசு வைத்திருப்பது அவசியம் அற்றது

N. Ganesan

unread,
Aug 16, 2014, 3:58:40 PM8/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, August 16, 2014 11:42:19 AM UTC-7, செல்வன் wrote:

2014-08-16 7:19 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மத்ய ஸர்க்கார் இந்தியாவின் க்லாஸிகல் மொழி என்று வடமொழி கற்பிக்க சில கோடி ரூபாய்கள் செலவிடலாம். தவறில்லை.
ஆனால், அது வெறும் இந்தி எழுத்தாக இல்லாமல், எப்பொழுதும் வடமொழி எவ்வாறு கற்பிக்கப்பட்டதோ அவ்வாறு கற்பிக்கச்
செலவிடல் வேண்டும்.


தேவையற்ற முயற்சி.

இதன் கீழே நீங்கள் சொல்வதைச் செய்ய பணம் செலவு ஆகுமே. அதைத்தான் குறிப்பிட்டேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages