--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உலகம் முழுவதுமாக இன்று 6,000 தொடக்கம் 7,000 சிவாச்சாரியார் குடும்பங்கள் உள. இவர்களுள் 1,000 குடும்பங்கள் இலங்கையில் உள. மலேசியா சிங்கப்பூரில் 150 குடும்பங்கள் வரை உள. அண்மையில் உலகெங்கும் பரவி வாழ்பவராக 150 குடும்பங்கள் உள. ஆக மொத்தம் பிறப்பு வழியாகச் சிவாச்சாரியார் குலத்தில் 35,000 பேரே உளர்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியம்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா, மொரிசியசு, பிரான்சு (இறியூனியன்) ஆகிய நாடுகளில் சிவாச்சாரியார் நிலைக்குத் தம்மை உயர்த்தியோர் ஆக மொத்தம் 300 குடும்பங்கள் உள. இவர்களின் குலத் தொகை மொத்தம் 2,000க்கும் கூடுதலாகாது.
இந்த 37,000 பேருள் அண்மைக் காலத் தலைமுறையினர் பூசனைத் தொழிலில் ஈடுபடுவதை விட்டு அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.
--
உலகம் முழுவதுமாக இன்று 6,000 தொடக்கம் 7,000 சிவாச்சாரியார் குடும்பங்கள் உள. இவர்களுள் 1,000 குடும்பங்கள் இலங்கையில் உள. மலேசியா சிங்கப்பூரில் 150 குடும்பங்கள் வரை உள. அண்மையில் உலகெங்கும் பரவி வாழ்பவராக 150 குடும்பங்கள் உள. ஆக மொத்தம் பிறப்பு வழியாகச் சிவாச்சாரியார் குலத்தில் 35,000 பேரே உளர்.
திரு. தீர்த்தாரப்பன் ...இந்த இழையில் இந்தக் கோணத்தை நான் இதுவரையில் பார்க்கவில்லை, எனவே உங்கள் கருத்தை நான் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன். ....நன்றி...///ஒட்டுமொத்தமாக, ஒரு குலத்தையே குற்றம் சொல்வது என் வரையில் சரியான புரிதலாகப் படவில்லை. எல்லா சிவாசாரியார்களுமே இப்படி இல்லை என்பதை நானறிந்த வரையில் மிக உறுதியாகச் சொல்ல இயலும். /////சிலர் மிக அதிக கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக இருக்கலாம். அவர்கள் எழுந்திருக்காது குலதர்மத்தைக் கடைபிடித்தது தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். சம்பந்தப்பட்டவர்கள், இவற்றக் கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, பிறர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ///மேலும் ....சராசரி பொதுமக்களுக்கு அந்தப் பிரிவுத் தமிழரில் யார் தமிழுக்கு மரியாதை தர விரும்புபவர்கள் யார் மரியாதை தரவிரும்பாதவர்கள் என்பது கண்டறிய சிரமமாக இருக்கும் பொழுது...பார்வதி சொல்வது போல ஒரு பொது சபையின் மரபைக் கடைபிடிக்க விருப்பமில்லாதவர்கள் அதை முதலிலேயே சொல்லி தங்களை விழாவில் இருந்து விலக்கிக் கொள்ளுதல் கற்றறிந்த பெரியோர்களின் கடமை...... தேமொழி
On Wednesday, August 13, 2014 6:26:29 PM UTC-7, THEETHARAPPAN R wrote:
"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனாருக்கும் அடியேன்" என்றுஅடியார்கள் எல்லோருக்கும் அடியேன் என்று பாடிய சுந்தரர் வழி வந்தவர்களா இச் சிவாச்சாரியார்கள்? பித்தாஎன்று இறைவனே அடி எடுத்துக் கொடுத்து பாடிய சுந்தரர் வம்சமா தமிழைப் புறக்கணிக்கிறது ?அவர்கள்புறக்கணித்தது தமிழை அல்ல சிவபெருமானை என்பதே சரியாக இருக்கும்.மகாபாரதத்தை வேத வியாசர் சொல்லவிநாயகர் எழுதியது போல திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லக் கேட்டு நடராஜப் பெருமான் எழுதியதாக
தில்லையில் வரலாறு உள்ளது.அப்பர் "தமிழோடு இசை பாட மறந்தறியேன்" என்றும், சம்பந்தர் " தமிழ் ஞான சம்பந்தன்" என்று தன்னைக் கூறிக்கொள்ளுவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
|
உரை | |
|
உரை | |
|
உரை | |
|
உரை | |
|
|
உரை | |
|
உரை | |
|
உரை | |
|
| |
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மேற்கண்ட |
சிவாசாரியர்கள் தமிழ்மொழி வாழ்த்திற்கு ஏன் எழுவில்லை என யோசித்தால், அவர்களது குலதர்மம் புரியும். சிவ தீக்ஷை பெற்ற பின் சிவ நாமம் ஒன்றுக்குத்தான் அடிபணிவதாக பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுகின்றனர். அவர்களுக்கு கருமம் செய்து வைக்க ஒரு அத்வைதி கனபாடிகளால் முடியாது. அவர்கள் ஆசாரம் வேறு.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
This is correct. You will have supporting evidence from Maraimalai Adigal's book 'Velaalar Naagareegam'. Also, Tamil culture is ancient and prior to Vedic culture and those who were doing the work of a priest were none other than the tamils, later converted to brahminhood with a crossed sacred thread when Vedic culture took dominance. That is why there are so many sects and Gothrams (Koottams) and 'vadama' is the one from the north to differentiate from the others!Teekayseer
2014-08-14 8:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, August 12, 2014 5:40:59 PM UTC+5:30, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:இன்னும் சரிய்யாகக் கூறவேண்டுமென்றால் இலங்கையில் வளர்ந்த சைவம் வேளாள பிராஅமணர்கள் என்றழைக்கப்பட்ட சைவப்பிள்ளைகளால் வளர்க்கப்பட்ட சமயம். பிராமணர்கள் கடல்கடக்க இயலாத நிலையில் ஆகமக் கோவிகளை நிர்வகித்து ஆகம அடில்லடையில் பூசை நடத்தியவர்களும் இந்த சைவப்பிள்ளைமார்களேவேளாளர்கள் எப்போது வேளாள பிராமணர்கள் ஆனார்கள்?நா. கணேசன்
On Wednesday, August 13, 2014 9:30:02 PM UTC-7, chandrasekaran1008 wrote:This is correct. You will have supporting evidence from Maraimalai Adigal's book 'Velaalar Naagareegam'. Also, Tamil culture is ancient and prior to Vedic culture and those who were doing the work of a priest were none other than the tamils, later converted to brahminhood with a crossed sacred thread when Vedic culture took dominance. That is why there are so many sects and Gothrams (Koottams) and 'vadama' is the one from the north to differentiate from the others!Teekayseerபார்ப்பாருக்கு என்ன வேலை? - என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார்."காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்
மாவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவுஅழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய". தொல். பொ. 177சிவாச்சாரியார்கள் இவரினின்றும் வேறானவர்கள். இதைத்தான் திருமந்திரத்தில்திருமூலர் வலியுறுத்தியுள்ளார்.
ஆமாம். சிவலிங்கத்தைத் தொடும் உரிமை சிவாச்சார்ய குருக்களுக்கே உண்டு. அதனால் தான் நாயன்மார்கள் யார்? - எனதமிழில் முதன்முதல் பட்டியலிடும் ”திருத்தொண்டத்தொகை” குருக்களை ‘முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்’ என்கிறது.ஸ்மார்த்தர்கள் இப்பணியை ஏற்றால் நாட்டுக்கு தீமை என்கிறார் திருமூலர்:பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றேசீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. -திருமந்திரம்பொழிப்புரை :
பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.
எனது ஃபேஸ்புக் பதிவில் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் மேலும் வழங்கியிருக்கும் தகவல்களை இந்த இழைக்கு தொடபு இருப்பதால் இங்கே தொகுப்பாகப் பதிகின்றேன்.
Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
பெரியார் மற்றும் திரு.வி.க நல்ல நண்பர்கள். ஈரோடு பக்கம் வரும் பொழுது எல்லாம் திரு.வி.க தன் தோழர் வீட்டில் தங்குவது வழக்கம்.
காலம் போன போக்கில், இருவரும் வெவ்வேறு திசை நோக்கி பயணம் செய்தனர். பகுத்தறிவு என்றார் பெரியார். ஆனால் பழுத்த சிவ பக்தரானார் திரு.வி.க.
பல ஆண்டுகளுக்கு பின், வேலை நிமித்தமாக திரு.வி.க ஈரோடு வந்து சேர்ந்தார். பெரியார் வீட்டில் தங்குவதாக அவருக்கு உத்தேசம் இல்லை. ஆனால் பெருந்தன்மை கொண்ட பெரியார், அவரை தமது வீட்டிக்கு வரும் படி அன்பாக பணிந்து ஒரு தூது அனுப்பினார்.
தோழன் சொல்லை தட்ட விரும்பாமல், திரு.வி.க அவர் வீட்டில் தங்க இசைந்தார். காலை குளித்து முடித்த பிறகு, குளியலறை விட்டு வெளியே வந்து திரு.வி.க, ஒரு அதிசயமான காட்சியை கண்டார்.
பழுத்த பகுத்தறிவு கொண்ட பெரியார், தம் கையில் ஒரு விபூதி மடலுடன், தன் நண்பருக்காக காத்து கொண்டு நின்றார். முக மலர்ச்சியுடன் திருநீர் இட்டு கொண்டார் திரு.வி.க. இருவரும் அகம் மகிழ்ந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.
இச்சிறு சம்பவத்திலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் நிறைய உண்டு. சிந்தியுங்கள்.
ref: https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/
&
http://esalathan.blogspot.com/2009/12/blog-post_09.html
[2]
[3]
கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
ref: http://tvrk.blogspot.com/2010/12/blog-post_26.html
..... தேமொழி
இந்த இழையை விட மற்றோர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைப்பது அரிது. எனவே...நாத்திகர்களை குறை கூறும் ஆன்மீகவாதிகள் கவனத்திற்கு இதைக் கொண்டுவர இதுவே சரியான நேரம்.therefore, the morel of the story is ... என்று குறிப்பிடாமலே தெளிவாகப் புரிவதால் நிகழ்சிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது...
பெரியார் சிறந்த மனிதநேயர். எதிரே அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.
சின்னத்தாயம்மாளின் வீட்டில் மாமிசம் சமைப்பது பெரிய தீட்டுக் காரியமாக கருதப்-பட்டதால், நாகு விறகை வெளியில் வைத்து ராமனுக்காக தனியாக மாமிசம் சமைப்பாள். ராமசாமியும் மாமிசம் சாப்பிடும் அபசார காரியம் செய்கிறவன் என்பதால் அவன் அந்த வீட்டு சமையலறைக்குள்ளே வரக்கூடாது என்பது தான் சின்னத் தாயம்மாளின் விதி. இதனால் நாகு சமைத்து முடித்து, கணவனுக்கு இந்த உணவை வெளியில் வைத்துப் பரிமாறி, உடனே போய் தலை முழுகி தீட்டை போக்-கினால் தான் வீட்டினுள் போக முடியும் என்கிற நிலை. இந்த லட்சணத்தில் வெள்ளி, சனி என்று பல நாட்கள் நாகு விரதம் வேறு இருந்தாக வேண்டும். விரதத்திற்கான பிரத்தியேக உணவு, பொது சமையலறையில் மூடி வைக்கப்பட் டிருக்கும். எவ்வளவு பசி என்றாலும் தலை முழுகி விட்டுத்தான் சமையலறைக்குள் போய் அந்த உணவை எடுத்துச் சாப்பிடவே முடியும். இப்படி நாகு பசியோடு போய் உணவை எடுத்துச் சாப்பிட கைவைத்தால், படக் என்று ஒரு எலும்பு துண்டு அதில் தலை நீட்டும். எல்லாம் ராமசாமியின் கைங்கர்யம் தான் என்று அவன் குறும்பை எண்ணிச் சிரித்-தாலும், அத்தோடு நாகம்மையின் விரதம் அம்பேலாகிவிடுமே. ஏன்டா, விரதம் இருக்குற பொண்ணை எப்படி பண்ணுற? என்று சின்னத்தாயம்மாள் ராமசாமியை எவ்வளவோ திட்டிப்பார்த்தார், ஊகூம், சரியாக நாகம்மாளின் விரத உணவி மட்டும் எலும்புத் துண்டுகள் முளைத்துக் கொண்டே இருக்க, இவன் திருந்த மாட்டான் நாகு. இந்த புருஷனை கட்டிக்கிட்டு நீ விரதம் இருந்து கிழிச்ச மாதிரி தான். போதும், விரதம் இருந்தது, விடு என்று மாமியார் முத்தாய்பு வைத்து விட, அத்தோடு நாம்மாளின் விரதப் படலம் முடிந்தே போனது.
இருந்தாலும் நாகு தன் மாமியாரை பின்பற்றி கோயிலுக்கு போவது, தாலியை ஒரு பெரும் பொக்கிஷமாய் மதித்துக் கொண்டாடு-வது என்றே இருந்து வந்தாள். அப்படி ஒரு சமயம், ஏதோ திருவிழாவின் போது, வீட்டுப் பெண்களோடு நாகுவும் கோயிலுக்கு போக நேர்ந்தது. அப்போது என்று பார்த்து, சில மைனர் பையன்கள், யாரும்மா நீ, இந்த கோயில்ல நீ தான் புது தாசியாமே என்று கேட்டுக்கொண்டு அவளை சூழ்ந்து ஏடாகூட-மாக பேச ஆரம்பிக்க, நாகுவுக்கு பயத்தில் உடம்பே உதற ஆரம்பித்து விட்டது. யார் இந்த ஆட்கள், ஏன் என்னிடம் வந்து இப்படி அசிங்கமாக பேசுகிறார்கள், கோயில் என்றால் தெய்வ வழிபாடு செய்யும் திருத்தலம் என்று தானே நினைத்து வந்தேன், இங்கே தாசிகள் ஒரு தனி சாம்ராஜியமே நடத்துகிறார்கள் போல இருக்கே. சே சே, கோயில்ல எல்லாம் இந்த கூத்து தான் நடக்குதா, இது தெரியாம நான் வேற வந்து இந்த காலி பசங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே, என்று அஞ்சி நடுநடுங்-கினாலும், எப்படியோ சமாளித்துக்கொண்டு தப்பித்து, வீடு வந்து சேர்ந்தாள். அப்புறம் தான் தெரிந்தது, இதெல்லாம் ராமசாமியின் லீலை என்று. கோயில் குலம்னு சுத்தாதேனு சொன்னா கேட்டியா, இப்ப தெரியுதா கோயில்களோட யோக்கியதை? என்று ராமன் கேட்ட போது, சரி தான் இனி கோயிலுக்கு போகலை என்ற முடிவுற்கு வந்தாள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
2014-08-14 22:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அதே பண்பாட்டை பின்பற்றி சிவாசாரியார்களின் மதநம்பிக்கையை மதித்து போற்றுவோம். அவர்கள் விரும்பாத ஒரு செயலை செய்ய அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்பதை பெரியாரின் உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.
1. ௐ அங்கயற்கண் அம்மையே போற்றி
2. ௐ அகிலாண்ட நாயகியே போற்றி
3. ௐ அருமறையின் வரம்பே போற்றி
4. ௐ அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
5. ௐ அரசிளங் குமரியே போற்றி
6. ௐ அப்பர் பிணிமருந்தே போற்றி
7. ௐ அமுத நாயகியே போற்றி
8. ௐ அருந்தவ நாயகியே போற்றி
9. ௐ அருள்நிறை அம்மையே போற்றி
10. ௐ ஆலவாய் அரசியே போற்றி
11. ௐ ஆறுமுகன் அன்னையே போற்றி
12. ௐ ஆதியின் பாதியே போற்றி
13. ௐ ஆலால சுந்தரியே போற்றி
14. ௐ ஆனந்த வல்லியே போற்றி
15. ௐ இளவஞ்சிக் கொடியே போற்றி
16. ௐ இமயத்தரசியே போற்றி
17. ௐ இடபத்தோன் துணையே போற்றி
18. ௐ ஈஸ்வரியே போற்றி
19. ௐ உயிர் ஓவியமே போற்றி
20. ௐ உலகம்மையே போற்றி
21. ௐ ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
22. ௐ எண்திசையும் வென்றோய் போற்றி
23. ௐ ஏகன் துணையே போற்றி
24. ௐ ஐங்கரன் அன்னையே போற்றி
25. ௐ ஐயம் தீர்ப்பாய் போற்றி
26. ௐ ஒப்பிலா அமுதே போற்றி
27. ௐ ஓங்கார சுந்தரியே போற்றி
28. ௐ கற்றோர்க்கு இனியோய் போற்றி
29. ௐ கல்லார்க்கும் எளியோய் போற்றி
30. ௐ கடம்பவன சுந்தரியே போற்றி
31. ௐ கல்யாண சுந்தரியே போற்றி
32. ௐ கனகமணிக் குன்றே போற்றி
33. ௐ கற்பின் அரசியே போற்றி
34. ௐ கருணை ஊற்றே போற்றி
35. ௐ கல்விக்கு வித்தே போற்றி
36. ௐ கனகாம்பிகையே போற்றி
37. ௐ கதிரொளிச் சுடரே போற்றி
38. ௐ கற்பனை கடந்த கற்பகமே போற்றி
39. ௐ காட்சிக்கு இனியோய் போற்றி
40. ௐ காலம் வென்ற கற்பகமே போற்றி
41. ௐ கிளியேந்திய கரத்தோய் போற்றி
42. ௐ குலச்சிறை காத்தோய் போற்றி
43. ௐ குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
44. ௐ கூடல் கலாப மயிலே போற்றி
45. ௐ கோலப் பசுங்கிளியே போற்றி
46. ௐ சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
47. ௐ சக்தி வடிவே போற்றி
48. ௐ சங்கம் வளர்த்தாய் போற்றி
49. ௐ சிவகாம சுந்தரியே போற்றி
50. ௐ சித்தம் தெளிவிப்பாய் போற்றி
51. ௐ சிவயோக நாயகியே போற்றி
52. ௐ சிவானந்த வல்லியே போற்றி
53. ௐ சிங்கார வல்லியே போற்றி
54. ௐ செந்தமிழ்த் தாயே போற்றி
55. ௐ செல்வத்துக் கரசியே போற்றி
56. ௐ சேனைத்தலைவியே போற்றி
57. ௐ சொக்கர் நாயகியே போற்றி
58. ௐ சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
59. ௐ ஞானாம்பிகையே போற்றி
60. ௐ ஞானப்பூங்கோதையே போற்றி
61. ௐ தமிழர் குலச்சுடரே போற்றி
62. ௐ தண்டமிழ்த் தாயே போற்றி
63. ௐ திருவுடை யம்மையே போற்றி
64. ௐ திசையெல்லாம் புரந்தாய் போற்றி
65. ௐ திரிபுர சுந்தரியே போற்றி
66. ௐ திருநிலை நாயகியே போற்றி
67. ௐ தீந்தமிழ்ச் சுவையே போற்றி
68. ௐ தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
69. ௐ தென்னவன் செல்வியே போற்றி
70. ௐ தேன்மொழியம்மையே போற்றி
71. ௐ தையல் நாயகியே போற்றி
72. ௐ நற்கனியின் சுவையே போற்றி
73. ௐ நற்றவத்தின் கொழுந்தே போற்றி
74. ௐ நல்ல நாயகியே போற்றி
75. ௐ நீலாம் பிகையே போற்றி
76. ௐ நீதிக்கரசியே போற்றி
77. ௐ பக்தர்தம் திலகமே போற்றி
78. ௐ பழமறையின் குருந்தே போற்றி
79. ௐ பரமானந்தப் பெருக்கே போற்றி
80. ௐ பண்ணமைந்த சொல்லே போற்றி
81. ௐ பவளவாய்க் கிளியே போற்றி
82. ௐ பல்லுயிரின் தாயே போற்றி
83. ௐ பசுபதி நாயகியே போற்றி
84. ௐ பாகம்பிரியா அம்மையே போற்றி
85. ௐ பாண்டியர் தேவியே போற்றி
86. ௐ பார்வதி அம்மையே போற்றி
87. ௐ பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
88. ௐ பெரிய நாயகியே போற்றி
89. ௐ பொன் மயிலம்மையே போற்றி
90. ௐ பொற்கொடி அன்னையே போற்றி
91. ௐ மலையத்துவசன் மகளே போற்றி
92. ௐ மங்கல நாயகியே போற்றி
93. ௐ மழலைக் கிளியே போற்றி
94. ௐ மனோன்மணித் தாயே போற்றி
95. ௐ மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
96. ௐ மாயோன் தங்கையே போற்றி
97. ௐ மாணிக்க வல்லியே போற்றி
98. ௐ மீனவர்கோன் மகளே போற்றி
99. ௐ மீனாட்சியம்மையே போற்றி
100. ௐ முழுஞானப் பெருக்கே போற்றி
101. ௐ முக்கண்சுடர் விருந்தே போற்றி
102. ௐ யாழ்மொழியம்மையே போற்றி
103. ௐ வடிவழகம்மையே போற்றி
104. ௐ வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி
105. ௐ வேத நாயகியே போற்றி
106. ௐ வையகம் வாழ்விப்போய் போற்றி
107. ௐ அம்மையே அம்பிகையே போற்றி
108. ௐ அகிலம் ஆளவந்தாய் போற்றி! போற்றி!!
///அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தபோது, கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அனைவரையும்போல அவரும் எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு நீங்கள் எழுந்து நிற்பீர்களா? எனக் கேட்டபோது, எதிரே இத்தனை பேர் எழுந்து நிற்கும்போது உங்களை மதித்து நான் நிற்க வேண்டாமா? எனக் கேட்டவர் பெரியார்.////
ஐயோ ..பாவம்....:((மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா?அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம்.
///சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.///ஐயோ ..பாவம்....:((மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா?அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம்.
///சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள்///இப்படி எல்லோரும் நீங்களாக ஆளாளுக்கு கடவுளுக்கென்று job description எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.இந்த மாதிரி குரூர குணம் உள்ளவர் கடவுள் என விளக்குவதை தவிர்த்து விடுங்கள்...இப்படியெல்லாம் தண்டிப்பவர் கடவுளாக இருப்பாரா என்று யாருமே யோசிப்பதில்லையா? ஏன் கடவள் பெயரைக் கெடுக்கிறீர்கள்?
மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார் நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை.
On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார் நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை.
தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?
On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:///சிவன் தன்னை தண்டிப்பான், தான் நரகத்துக்கு செல்லவேண்டும் என்ற எந்த பின்விளைவையும் பற்றி அவர் யோசிக்க வேன்டியது கிடையாது.///ஐயோ ..பாவம்....:((மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்.
என்னைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தால் போட்டுத் தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை என்று சிவன் சொன்னாரா?அன்பே சிவம் என்றால் என்னதான் அர்த்தம்.
ஒருவருக்கு தாய் தந்தையர் பிள்ளை குட்டிகள் இருப்பது போல் இன்னொருத்தனுக்கும் தாய் தந்தையர் பிள்ளை குட்டிக்கள் இருக்கும் போது அவரவரை அவரவர் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டுவிட்டால் தொண்டின் தேவை எங்கே?
///சிவாசாரியார்களுக்கு அப்படி அல்ல. சிவனை அன்றி வேறு கடவுளை வணங்கினால் நரகம் என நம்புகிறவர்கள்///இப்படி எல்லோரும் நீங்களாக ஆளாளுக்கு கடவுளுக்கென்று job description எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.இந்த மாதிரி குரூர குணம் உள்ளவர் கடவுள் என விளக்குவதை தவிர்த்து விடுங்கள்...இப்படியெல்லாம் தண்டிப்பவர் கடவுளாக இருப்பாரா என்று யாருமே யோசிப்பதில்லையா? ஏன் கடவள் பெயரைக் கெடுக்கிறீர்கள்?
On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார் நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை.
தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?
எங்கே ஆதாரம்? ஆதாரமில்லா தாய்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டால் சிவாச்சார்யர்கள் சிவனைப் பார்த்துப்பாங்க என்றீர்கள்.என்ன தான் இருந்தாலும் ஐ.டி சம்பளம் வராது-னு பல சிவாச்சார்யர் வீட்டுப் பசங்க ஐ.டி. தொழிலுக்குப்போறாங்க.சிவன். விஷ்ணு, கடவுள் என்ற ஹிண்டுயிஸம் பிஸினெஸ் தழைத்தோங்க பலரும் வடமொழி கற்றுஆகமங்கள் சொல்ல, அர்ச்சனை பண்ண தயாரா இருக்காங்க. விட்டால் நடக்கும். பாஜக வழி அதுவே.
On Friday, August 15, 2014 6:27:02 AM UTC-7, ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் wrote:
On Friday, August 15, 2014 11:47:36 AM UTC+5:30, தேமொழி wrote:மதவாதிகள் ஏன் இப்படி ஏமாற்றும் பொய்யுரைகளைப் பரப்புகிறீர்கள். யார் நரகத்தில் துன்பப்பட்டு வந்து இதையெல்லாம் சொல்லிச் சென்றது. எங்கே ஆதாரம்?இந்த மதவாதிகள் கொடுமை தாங்க முடியவில்லை..மூளைச்சலவை கொடுமையோ கொடுமை.
தமிழ்த் தாய்க்கு எவ்வளவு கை? எத்தனை தலை? என்ன உயரம்? தாய் யார்? தந்தை யார்? கணவன் யார்? கல்யாணமே ஆகலையா?ஆதி சிவன் பெற்று விட்டான் என்ற பரமானந்தக் கவிதைக்கு ஆதாரம் இல்லையா?
மற்ற பார்ப்பளர்கள் திரிமேனி தீண்டாதோர் என்பதி பெரிய கண்டுபிடிப்பே கிடையாது. அதை மற்றோர் தான் புரிஞ்சக்கணும்.
“ நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து.ஒரு முட்டாள்தனத்திற்கு பதில் இன்னொரு முட்டாள்தனம்”
பெரியார்- விடுதலை , 01-ஜூன்-1954:
இன்று வல்லமை, மிந்தமிழ் குழுமங்களில் நம்மிடையே எழுதுகிற நண்பரின் சொற்கள் புண்படுத்துவனவாக இருக்கிறதென்பதை எழுதினால் என்றோ பெரியார் எழுதியதை முயன்று தேடி எடுத்து இட்டுள்ளீர்கள் அன்பிற்கினிய செல்வன்.பெரியாருடைய சொற்கள் தமிழகத்தில் பலரை ஒரு காலத்தில் வருந்தச்செய்து அதற்கு எதிர்வினைகள், கசப்பு இன்று வரை இருக்கிறதென்பது என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் இன்றிருப்பவர் சொல்லவும் இயலாது.ஆனால் இன்று எழுதுகிற நம் நண்பர்களிடம் நம் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். கசப்பு வளர்க்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.நன்றி.
ஆகா அருமை..அருமை.. உதவிக்கு நன்றி செல்வன்..இப்படி தனது சொந்த வாழ்வில் ஆணித்தரமான கொள்கைகள் வைத்திருந்தவரே பொது விழாவில் எப்படி மக்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. இது போலவே முட்டாள்தனம் என்று அவர் எதிர்த்த கருத்துக்களையும் ஒரு பக்கம் வைத்து விட்டு நண்பர்கள் என்றதும் அவர்களை அவமதிப்பது கூடாது என்ரு என்ன ஒரு பண்பாட்டோடு இருந்திருக்கிறார் பாருங்கள்.அதனால்தான் அவருக்கு துன்புறுத்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உரிமைக்காகப் போராடும் எண்ணம் எழுந்திருக்கிறது.ஆனால் இந்த தன்னலம் கருதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால்தான் ஆதிகாலத்தில் இருந்து சச்சரவுகள்.இறுதியாக நான் சொல்ல வந்தது ஒரு வழியாக உங்களுக்குப் புரிந்துவிட்டது.அவருடைய பெருந்தன்மையை பிறரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.ஆமாம் ஏன் சேம் சைட் கோல் போடறீங்க???!!!!????
மத்தநாட்டில் நாத்திகர்கள் படும் பாட்டையும் தொன்றுதொட்டு நாத்திகரகளுக்கு இடமளித்து வரும் நாட்டிற்கு இது கூட செய்யலைன்னா எப்படி?
சூழ்நிலை --- 2:தமிழ்மொழி வாழ்த்து பாடும் பொழுது தமிழராக இருந்தும் ஏன் தமிழை அவமதிக்கிறீர்கள்? தாய்மொழிப்பற்று இல்லையா ? (இங்கு நாடு முக்கியமல்ல அவர்கள் தமிழர் என்பது மட்டும்தான் கவனிக்கப்பட வேண்டியது)
சூழ்நிலை --- 1:எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழியும் ஆங்கிலமும் போதும் ....இந்தியும் வேண்டாம் சமஸ்கிரதமும் வேண்டாம்...விரும்புபவர்கள் எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும் ...வேண்டாம் என்பவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்றால் ....வரும் பதில் ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே வரும் பதில் ...... தேசத்துரோகி...தேசிய நலனில் அக்கறை இல்லையே உனக்கு
14 ஆகஸ்ட், 2014 1:03 பிற்பகல் அன்று, amachu <aama...@gmail.com> எழுதியது:
மத்தநாட்டில் நாத்திகர்கள் படும் பாட்டையும் தொன்றுதொட்டு நாத்திகரகளுக்கு இடமளித்து வரும் நாட்டிற்கு இது கூட செய்யலைன்னா எப்படி?
இதை இன்றைய நாளின் சிறந்த ஜோக்காக போற்றலாம்.
எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழியும் ஆங்கிலமும் போதும் ....இந்தியும் வேண்டாம் சமஸ்கிரதமும் வேண்டாம்...விரும்புபவர்கள் எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும் ...வேண்டாம் என்பவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்றால் ....வரும் பதில் ...அதுவும் தமிழர்களிடம் இருந்தே வரும் பதில் ...... தேசத்துரோகி...தேசிய நலனில் அக்கறை இல்லையே உனக்கு
மத்ய ஸர்க்கார் இந்தியாவின் க்லாஸிகல் மொழி என்று வடமொழி கற்பிக்க சில கோடி ரூபாய்கள் செலவிடலாம். தவறில்லை.ஆனால், அது வெறும் இந்தி எழுத்தாக இல்லாமல், எப்பொழுதும் வடமொழி எவ்வாறு கற்பிக்கப்பட்டதோ அவ்வாறு கற்பிக்கச்செலவிடல் வேண்டும்.
2014-08-16 7:19 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மத்ய ஸர்க்கார் இந்தியாவின் க்லாஸிகல் மொழி என்று வடமொழி கற்பிக்க சில கோடி ரூபாய்கள் செலவிடலாம். தவறில்லை.ஆனால், அது வெறும் இந்தி எழுத்தாக இல்லாமல், எப்பொழுதும் வடமொழி எவ்வாறு கற்பிக்கப்பட்டதோ அவ்வாறு கற்பிக்கச்செலவிடல் வேண்டும்.
தேவையற்ற முயற்சி.